டெல்லி: முன்னாள் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ஆதார் அடையாள அட்டைத் திட்டம் மத்திய அரசால் விரைவில் கைவிடப்பட உள்ளது. அதற்குப் பதிலாக தேசிய மக்கள்தொகைப் பதிவு (National Population Register, NPR) என்ற திட்டத்தை அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரவிக்கிறது.
2009ஆம் ஆண்டு ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது, இத்திட்டத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான நந்தன் நீலகேனி தலமைவகித்து நடத்தி வந்தார். இத்திட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு சுமார் 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
மூடுவிழா
தற்போதைய அரசு தேசிய மக்கள்தொகைப் பதிவு திட்டத்தை வலியுறுத்தி வருவதால், ஆதார் திட்டத்திற்கு விரைவில் மூடுவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், என்பிஆர் திட்டத்தை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்தத் திட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அவர். ஆதார் திட்டத்தை
போகுமா? போகாதா?
ஆனால், இந்தப் புதிய திட்டத்தை ஆதார் திட்டத்துடன் சேர்க்கப் போகிறாரா, ஆதார் திட்டம் முழுவதுமாகக் கைவிடப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆதார் குளறுபடிகள்
ஆதார் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். எந்தவிதமான சட்ட ஆலோசனையையும் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களின் கைரேகைகள் மற்றும் கண்களைப் பதிவு செய்யும் உரிமைகளைத் தனியாரிடம் விட்டதும் ஒரு பெரிய கூத்து. ஆதார் அட்டை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சிங்-சிதம்பரம்
இந்த ஆதார் அட்டை குறித்து பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் எழுந்துள்ளன. ப. சிதம்பரம் உள்துறை அமைச்சரான பிறகு, என்பிஆர் திட்டத்துடன் ஆதார் திட்டத்தை இணைப்பது குறித்தும் மன்மோகன் சிங் ஒரு இணக்கத்திற்கு வந்தார்.
வாஜ்பாய் அரசின் என்பிஆர்
எனவே, மிகவும் குளறுபடியான இந்தத் திட்டம் தேவைதானா என்று மத்திய அரசு யோசித்து வருகிறது. வாஜ்பாய் தலைமையிலான முன்னாள் பாஜக அரசிலேயே இந்தப் புதிய என்பிஆர் திட்டம் தீட்டப்பட்டது என்பது மிகவுப் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications