மும்பை: இந்தியாவிற்கும், தென்னாப்ரிக்கவிற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதன் பொருட்டாக, இந்தியாவில் தன்னுடைய சேவைகளை விஸ்தரிக்க முயற்சி செய்து வருகிறது தென் ஆப்ரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து மும்பைக்கு தினசரி விமான சேவையை நடத்தி வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தால், டெல்லியிருந்தும் நேரடி விமான சேவையை வழங்கலாம் என்று யேரிசத்து வருகிறது இந்த நிறுவனம்.
தென் ஆப்ரிக்கா ஏர்வேஸ்
'தென் ஆப்ரிக்கா ஏர்வேஸைப் பொறுத்த வரையில், எங்களுடைய வளர்ச்சித் திட்டத்தில் இந்தியா தலையாய பங்கு வகிக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்காவிற்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. என அவர் தென் ஆப்ரிக்கா ஏர்வேஸின் இந்திய மேலாளராக இருக்கும் சஜித் கான் தெரவித்தார்.
அதிகப்படியான பயணிகள்
மேலும், கடந்த ஆண்டில் 130,000 பேர் இந்தியாவிலிருந்து தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு விமான சேவையைத் தொடங்க இந்த எண்ணிக்கையையே காரணமாக சொல்லாம்.
விரிவாக்கம்
'மும்பை-ஜோகன்னஸ்பர்க் இடையே நேரடி விமான சேவையை நாங்கள் மட்டுமே இயக்கி வருவதால், ஆரோக்கியமான பயணிகள் எண்ணிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியாவுடன் நாங்கள் செய்துள்ள ஒப்பந்தமும், இந்நாட்டில் நாங்கள் விரிவாக்கம் செய்ய உதவியாக இருக்கும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விமான சேவை
குறைவான பயணிகள் இருந்ததன் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் இந்த வழிப்பாதையிலிருந்து வெளியேறி விட்டது. இடைப்பட்ட காலத்தில், தென் ஆப்ரிக்க ஏர்வேஸ் நிறுவனமும் ஒரு வாரத்திற்கு 7-ஆக இருந்த மும்பை விமான சேவையை ஜுலை 1-ல் இருந்து 6-ஆக குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஏனெனில், இந்த நிறுவனம் பயணத்தை மறுஆக்கம் செய்யும் திட்டத்தை தொடங்க உள்ளது.