டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவை குறைந்த பட்சம் 51 சதவீதத்திற்கு உயர்த்துவதன் மூலம், இந்தியா ஒரு முக்கியமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகத் திகழும் என்றும், இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களை சார்ந்திருப்பது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
'இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதத்திற்கு அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் பெருத்த மாற்றங்கள் ஏற்படலாம். நுண்ணிய தொழில்நுட்பங்களைப் பெற ஏதுவாக இருப்பதால், உள்நாட்டு நிறுவனங்கள் உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வார்கள், மேலும் இந்தியாவை உலகின் பாதுகாப்பு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றுவார்கள்' என்று அரசிடமிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுத இறக்குமதி
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுமார் 8 பில்லியன்களுக்கு பாதுகாப்பு சாந்த ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. உலகிலேயே மிக அதிகமான அளவில் பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகளில் இந்தியாவும் ஒன்று. இதுமட்டும் அல்லாமல் மிகவும் குறைந்த அளவே ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா உள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள்
இதனால் அன்னிய முதலீட்டு அனுமதியால் உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் கவலைகள் குறித்து சொல்லும் போது, முன்மொழியப்பட்டுள்ள வரைவுக் குறிப்பில் இந்த சென்சிட்டிவ் ஆன துறைக்குப் போதுமான அளவு பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்னிய முதலீடு
'பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்தினர் கட்டுப்படுத்தும் வகையில் கொடுப்பது அவர்களுக்கு மிகவும் ஊக்கமூட்டுவதாக இருப்பதால், அவர்கள் இந்தியாவிற்கு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவார்கள். இந்தியாவை தங்களுடைய உற்பத்தி மையமாக உருவாக்குவார்கள், மேலும், இங்கிருந்தே ஏற்றுமதிகளும் செய்வார்கள். இது வேலை வாய்ப்பையும், அதிகப்படியான வருவாயை உருவாக்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமோகமான ஆதரவு
இத்திட்டத்தை குறித்து அரசாங்கம் பல்வேறு-நாடுகளின் அமைச்சகங்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் போது, பெரும்பாலான தொழில் அமைப்புகளும் இதற்கு ஆதரவாக மிகவும் தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய நாடுகள்
1 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்குகளைக் கொண்டிருக்கும் உள்நாட்டு தொழிலகங்கள், இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்ப்பு
49 சதவீதத்திற்குள் அந்நிய நேரடி முதலீட்டை வைத்திருப்பதால் எந்தவிதமான பயன்களும் இருக்கப் போவதில்லை என்கிறார்கள் இவர்கள். இது ஒரு பலனும் இல்லை என்ரு பல தரப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications