நியூயார்க்: சீனாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா வியாழக்கிழமை நியூயார்க் பங்கு சந்தையில் "பாபா" என்ற குறியீட்டில் இணைந்தது.
அமெரிக்காவின் சில்லறை வர்த்தக சந்தையில் நீங்க இடம் பிடித்திருக்கும் சீன நிறுவனமான அலிபாபா நிறுவனத்திற்கு இது அடுத்த வெற்றி என்றே சொல்லலாம். மேலும் இதன் மூலம் அதிகப்படியான நிதி இந்நிறுவனத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அலிபாபா தனது கிளைகளை அமெரிக்கா முழுவதும் பரப்ப முடிவு செய்துள்ளது.
மொபைல் விற்பனை
உலகில் ஸ்மார்ட்போன் ஆதிக்கம் துவங்கியதை அடுத்து இந்நிறுவனம் மொபைல் வாடிக்கையாளர்களை கவர அதிகப்படியான முயற்சி செய்து வருகிறது இதில் ஒரு பகுதியாக யூசிவெப் நிறுவனத்தை சில வாரங்கள் முன் கைபற்றியது.
1 பில்லியன் டாலர்
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதால் இந்நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் வரை நிதி திரட்ட முடியும் அமெரிக்க பங்கு சந்தை முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்தனர். இது உண்மையிலே மிகப்பெரிய தொகை எனவும் அவர் தெரிவித்தனர்.
உயர்வு
மேலும் அடுத்த சில வருடங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 15 பில்லியன் டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக பங்கு சந்தை ஆய்வாளர்கள் கூறிகின்றனர். மேலும் நியூயார்க் பங்குச்சந்தையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அடுத்து மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனம் என்றால் அது அலிபாபாவாக தான் இருக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அலிபாபா திட்டம்
பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அலிபாபா உலக நாடுகளுக்கும் தனது சேவையை அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பிரச்சனைகள்
கடந்த வாரம் அமெரிக்க அரசின் குழு அலிபாபா மற்றும் பிற சீன நிறுவனங்கள் அமரிக்க சந்தையில் இறங்குவது குறித்து சட்ட ரீதியில் சில எச்சரிக்கைகள் விடுத்தது.
முதலீடு
இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால் அடுத்த ஒறாண்டுக்குள் உங்கள் முதலீடு 2 அல்லது 3 மடங்கு ஆகலாம்.


Click it and Unblock the Notifications