மும்பை: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்து முழுமையாக ஒரு மாதம் ஆன நிலையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு தொடந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத்தில் மட்டும் இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் சந்தையில் சுமார் ரூ.32,000 கோடி குவிந்துள்ளது.
சந்தையின் தகவல் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பங்கு சந்தையில் ரூ.13,764 கோடியும் (2.3 பில்லயன் டாலர்), அதேபோல் கடன் சந்தையில் ரூ.18,188 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அன்னிய முதலீடு
இந்திய சந்தையில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய திட்டங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. மேலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலையை நிலையான தன்மையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்து.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்
இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்த பங்கு அன்னிய முதலீட்டு நிறுவனத்தை மட்டுமே சாறும். இத்தகைய நிறுவனங்களின் முதலீடு நாட்டின் பங்கு சந்தையை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் அதித அன்னிய முதலீட்டால் பங்கு சந்தை 3.64 சதவீதம் உயர்ந்துள்ளது.
2014ஆம் நிதியாண்டு
இந்த வருடம் துவங்கிய முதல் அன்னிய நிறுவனங்கள் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் சுமார் ரூ.59,568 கோடியும், கடன் சந்தையில் 64,307 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.
டாலர் இருப்பு
அதிகப்படியான டாலர் முதலீட்டைக் கொண்டு அதிகப்படியான தங்கம், கச்சா எண்ணெய், போன்றவற்றை சமாளிக்களாம். அதனால் பொருளாதார வளர்ச்சியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.