மும்பை: பங்குச் சந்தை முதலீட்டில் எப்போதும் போலவே இப்போதும் இந்தியாவின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் 'நம்பர் ஒன்'றாக உள்ளது.
மற்ற கார்ப்பரேட் பெருந்தலைகளான இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக், டெக் மஹிந்த்ரா ஆகியவற்றின் கூட்டு முதலீட்டுத் தொகைகளுக்கு கிட்டத்தட்ட இணையான முதலீட்டுடன் டிசிஎஸ் நிறுவனம் சந்தை முதலீட்டில் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
கணக்கு விவரம்...
கடந்த ஜூன் 27ஆம் தேதியின் நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை முதலீடு ரூ.469,440.82 கோடியாக இருந்தது. இந்நிலையில் மற்ற 4 நிறுவனங்களின் மொத்த சந்தை முதலீட்டுத் தொகை ரூ.473,225.58 கோடி ஆகும்.
எப்போதும் டாப்தான்
கடந்த பல காலாண்டுக் கணக்குகளை வைத்துப் பார்க்கும்போது, டிசிஎஸ் நிறுவனம் தான் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தக் காலகட்டங்களில் அதன் தொழில் வளர்ச்சி ஏறுமுகத்திலேயே இருந்து குறிப்பிடதக்கது.
வளர்ச்சி
கடந்த 2013ல் 70%க்கும் அதிகமான பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்து வந்த டிசிஎஸ் நிறுவனம், இப்போதும் பலத்த வளர்ச்சி கண்டுள்ளது.
பங்கு மதிப்பு
கடந்த திங்களன்று, டிசிஎஸ்ஸின் பங்கு மதிப்பும் கடந்த ஓராண்டின் அதிகபட்சமான ரூ.2427ஐத் தொட்டது. அன்றைய தினத்தின் முடிவில் அதன் மதிப்பு ரூ.2,419.45ஆக் இருந்தது.


Click it and Unblock the Notifications