டெல்லி: சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்கார்ரகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிடும் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று பிரசமர் பதவியில் அமர்ந்த மோடி சந்திக்கும் மிகப்பெரிய சவால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டாக தான் இருக்கும்.
நரேந்திர மோடி
மோடியின் தேர்தல் வாக்குறுதியில் அவர் அதிகமாக வலியுறுத்தியது நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல். அதனை ஒத்தே அமைந்தது நேற்றைய ரயில்வே பட்ஜெட்.
கசப்பான மருந்து
மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பணவீக்கத்தை களையவும், வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்கவும், இந்த மத்திய பட்ஜெட் "ஒரு கசப்பான மருந்தாகவே" இருக்கும் என அவர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
மத்திய பட்ஜெட்
இன்று காலை 11 மணியளவில் அவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்களின் முன்னிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பங்கு சந்தை
இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று, காலை வர்த்தக துவக்கம் முதல் பங்கு சந்தை மந்தமாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications