ரெட்மாண்ட்: உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனம் என்று கேட்டால் நாம் கண்களை மூடிக்கொண்டு உடனே சொல்வது மைக்ரோசாப்ட் தான். இத்தகைய பெறு நிறுவனத்தின் சீஇஓவாக இருப்பவர் சத்ய நடெல்லா, ஒரு இந்தியர். இந்நிறுவனத்தின் பணியின் வேகத்தையும், தரத்தையும் உயர்ந்த இந்நிறுவனத்தில் அதிகப்படியான பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்யதுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது சத்யா அவர்களில் அறிவுறுத்தலின் படியே இந்த ஆட்குறைப்பு நடைபெறபோவதாக கருதப்படுகிறது.
மேலும் இது குறித்த ஒரு மெமோவும் நிறுவன ஊழியர்களுக்கு சத்யா அனுப்பியுள்ளார், அதில் நிறுவனத்தை குறைத்து, வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சத்யாவின் மறுப்பு
ஆனால் சத்யா அதுகுறித்து கூறுகையில் "ஆட்குறைப்பு போன்ற எந்த ஒரு எண்ணமும் இல்லை" என சத்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எங்கள் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்களை விட அதிகளவில் பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்நிறுவனத்தில் 127,000 பேர் பணியாற்றுகின்றனர்.
புதிய வருடம்
இந்நிறுவனத்தின் புதிய நிதியாண்டு துவங்கிய நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அதிகளவில் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளிவரும் எனவும் இந்நிறுவனத்தின் முக்கிய கூட்டத்தில் தெரிவித்தார்.
உண்மை நிலை
நடெல்லாவின் மெமோவை பார்த்தால் ஆட்குறைப்பு என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது போன்றே உள்ளது. ஆனால் நிறுவனத்தில் ஆட்குறைப்பு கண்டிப்பாக இருக்கும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
வால் ஸ்ட்ரீட்
வால் ஸ்ட்ரீட் கணிப்பின் படி நடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தரத்திற்காக அதிகப்படியான பணியாளர்களை வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. இது கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஆட்குறைப்பை விட அதிகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகள்
மேலும் நடெல்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொழிற்நுட்ப முறையில் நிறுவன தயாரிப்புகளை எப்படி முன்னேற்றுவது என்பதை திட்டமிடவும் வலியுறுத்தியுள்ளார்.
நோக்கியா இணைப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நோக்கியா நிறுவனம் இணைந்ததை தொடர்ந்து இதன் வர்த்தகம் மற்றும் தயாரிப்பை அதிகரிக்க அதிகப்பிடியான ஆட்கள் மற்றும் அறிவுத் திறன் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் பிங் மற்றும் எக்ஸ்-பாக்ஸ் தயாரிப்புகளை மெருகேற்றவும் முடிவு செய்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications