மும்பை: பொது துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பிலான இன்போசிஸ் நிறுவன பங்குகளை வாங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்தின் மோசமான செயல்பாட்டின் காரணமாக இந்நிறுவன பங்குகளை பெரும் அளவில் குறைத்தது குறிப்பிடதக்கது. தற்போது இந்த நிலைமை சரியான நிலையில் ஏற்கனவே இன்போசிஸின் பங்குகளை வைத்துள்ள எல்ஐசி, தற்போது 3.82% அதிகமான பங்குகளை வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு அதிகம்
பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள எல்ஐசி நிறுவனம், கடந்த 2013 ஜூன் மாதத்தில் 6.72% மதிப்பிற்கு இன்போசிஸின் ஸ்டேக்குகளை வைத்திருந்தது.
மளமள குறைவு
இதைத் தொடர்ந்து கடந்த 3 காலாண்டுகளில் தன் ஸ்டேக்குகளை மளமளவெனக் குறைத்து கொண்டதால், இந்நிறுவனத்தில் சொத்தை பெருக்கிக்கொள்ள எல்ஐசி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனம் ரூ.1,100 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
உள் நாட்டில் ஓ.கே.
எல்ஐசி தவிர DIIs எனப்படும் உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களும் இன்போசிஸிடமிருந்து அதிக பங்குகளை (14.08%) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாங்கியுள்ளனர். அதற்கு முந்தைய காலாண்டில் இதன் மதிப்பு 13.66% மட்டுமே!
வெளி நாடுகளில் செல்லவில்லை
ஆனால் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாங்கியுள்ள இன்போசிஸின் பங்குகளின் மதிப்பு (41.58%) அதற்கு முந்தைய காலாண்டு மதிப்பை (42.10%) விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் பங்கு மதிப்பு
இன்றைய பங்கு சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.3,225.45 ஆகும்.
ஏன் இந்த திடீர் பர்சேஸ்?
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக விஷால் சிக்கா நியமிக்கப்பட்ட பின்னர் தான் எல்ஐசியின் இந்த பர்சேஸ் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அவர் அடுத்த மாதம் துவக்கத்தில் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் கண்ட பங்கு மதிப்பு
பதவிக்காலம் முடிவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இன்போசிஸிலிருந்து அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி வெளியேறினார். அதிலிருந்து அதன் பங்கு மதிப்புகள் மிகவும் மோசமாக ஆட்டம் கண்டிருந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் அவர் இன்போசிஸிற்குள் நுழைந்தார். அவர் மீண்டும் வந்த பின்னர், அந்த நிறுவனத்திலிருந்து 13 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications