டெல்லி்: வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா, இந்திய ஆயுத படைகள் உடன் இருமுனை கூட்டுறவு வைத்துக்கொள்ள ஆசைபடுவதாக இந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
அது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் "இந்திய ராணுவத்துடன் இணைந்து பணிபுரிவதில் அமெரிக்க ராணுவம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, மேலும் இதற்கான பேச்சுவார்த்தையை இந்திய அரசுடன் செய்ய சரியான தருணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளரான சக் ஹேகல் கூறுகையில் இதுக்குறித்து இந்தியாவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என தெரிவித்தார்.
அமெரிக்கா வளரும் நாடுகளுடன் இதுபோன்ற சிறு நடவடிக்கைகளுடன் ஒரு நாட்டிற்குள் சென்ற இந்நாட்டின் மொத்த ரகசியத்தை கொள்ளை அடித்து வருகிறது என விக்கிலிக்ஸ் ஒரு முறை தனது இணைதளத்தில் பதிவு செய்திருந்தது. இந்த இருமுனை கூட்டுறவில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.