மும்பை: வங்கி பணியில் சேர விரும்பும் பொறியாளர்கள், பட்டதாரிகள், ஐடி ஊழியர்கள், என ஏனையோருக்கும் ஒரு நல்ல செய்தி, வங்கி தனிப்பட்ட தேர்வு நிறுவனம் (IBPS) ஸ்டேட் வங்கி தவிர இந்திய பொதுத்துறை வங்கிகளில் தகுதிகாண் அதிகாரிகள் / மேலாண்மை பயிற்சியாளர்கள் (probationary officers/management trainees) பணியிடங்களை நிரப்ப பொது தேர்வு அறிவித்துள்ளது.
இன்றைய நடைமுறையில் இலட்சக்கனக்கான பட்டதாரிகள் கல்லூரி படிப்பை முடித்து வெளி வரும் நிலையில், கிடைக்கும் வாய்ப்பை அனைத்தையும் பயன்படுத்த நினைக்கிறார்கள் அவர்கள். ஆதனால் வங்கி வேலை, கால் சென்டர் வேலை என ஒன்றை கூட விடுவதில்லை. இதனால் எந்த ஒரு வேலைக்கு இண்டர்வியூவ் சென்றாலும் போட்டி.. போட்டி.. மட்டுமே.
(Read This: 5 facts on the National Savings Certificates that make it an attractive investment)
இந்த நிலையில் இருந்து இந்தியா எப்போது மீண்ட வரபோகிறது என்பது கடவுளும் மட்டுமே தெரிந்த ஒன்று.
ஆட்சேர்ப்பு
2015-16ஆம் ஆண்டுக்களில் வங்கியில் இருக்கும் காலியிடங்களை நிரப்பவே இந்த தகுதி தேர்வு ஐ.பீ.பி.எஸ் தெரிவிக்கிறது. மேலும் இதற்கான நியமிக்கும் வேலைகள் வருகிற ஏப்ரல் 2015ஆம் ஆண்டில் நடக்கும்.
ஆன்லைன் பதிவு
இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஜூலை 22ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 11 தேதியன்று முடிவடைகிறது. மேலும் இந்த தேர்வு அக்டோபர் 2014இல் நடக்கும் என ஐபீபிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நாள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தது.
விபரங்கள்
இந்த தேர்வு பற்றிய முழு விபரத்தையும் இங்க கீளிக் செய்தால் தெரியும்.
உலகம்
இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும் வரை, கிடைத்த வேலையை மனநிறைவுடன் செய்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி அடையலாம். மேலும் கடுமையாக உழைப்பவனின் பலன் இன்று கிடைக்காமல் போலகலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அது வெளிச்சத்திற்கு வரும். வெற்றி உங்களுக்கே..


Click it and Unblock the Notifications