மும்பை: கடும் போட்டிக்கு இடையில் கடனில் தத்தளித்த ஜெய்பீ குழுமத்தின் ஹைட்ரோ எலக்டிரிக் திட்டங்களை ஞாயிறு கிழமையன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கைபற்றியது. இத்திட்டங்கள் கைபற்ற கெளதம் அதானி மற்றும் சஞ்சன் ஜிந்தால் ஆகியோர் கடும் போட்டி போட்டனர், ஆனால் போட்டிகளை மீறி மிஸ்டர்.அனில் இதை கைபற்றிவிட்டார்.
இந்த திட்ட விற்பனையின் மூலம் ஜெய்பீ குழுமத்தின் 10,000 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ எலக்டிரிக் (நீர்மின்) திட்டங்களை அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கைபற்றியுள்ளது.
ரிலையன்ஸ் பவர்
இந்தியாவில் நீர்மின் உற்பத்தி நிறுவனங்களில் மிகப்பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் பவர் தான். 2015ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் சுமார் 7,800 மொக வாட் மின் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்நிறுவனம் உருமாற உள்ளது. மேலும் இந்நிறுவனம் அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனம் 5000 மொகவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜெய்பீ குழுமம்
இந்நிறுவனம் சுமார் 5,800 கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த திட்ட பரிமாற்றத்தின் முலம் கிடைத்த 10,000 கோடி பணத்தில் இந்நிறுவனம் தனது கடனில் பெரும் பகுதியை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஹைட்ரோ எலக்டிரிக் திட்டங்கள்
இந்த ஒப்பந்தத்தில் இமாச்சல பிரதேசத்தில் கர்ச்சம் வாங்டூ (1,091 MW), பாப்சா (300 MW) ஆகிய திட்டங்களும் உத்தரகாண்டு மாநிலத்தின் விஷ்னுபிரயாக் (400 MW) ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.
6 மாத காலம்
இந்த திட்ட பரிமாற்றகள் அனைத்தும் அடுத்த ஆறுமாத காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து விடும் என ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய வர்த்தக செய்தி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
அபுதாபி
ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் அபுதாபி நேஷனல் எலக்ட்ரிக் நிறுவனம் ஜெய்பீ நிறுவனத்தின் இரண்டு முக்கிய திட்டங்களை 1.6 பில்லியன் டாலருக்கும் கைபற்றியுள்ளது.