டெல்லி: மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக இந்திய சந்தையில் ஜூலை மாதத்தில் மட்டும் அன்னிய முதலீடாக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல வளரச்சி திட்டங்களும், பல துறைகளில் அன்னிய முதலீட்டாகான அளவீடு தளர்க்கப்பட்டது இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் கொட்டி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய கடன் சந்தை மற்றும் பங்குசந்தையில் சுமார் 25 பில்லியன் டாலர் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல முதலீட்டு நிறுவனங்கள் கூறுகையில் இந்த அதிகப்படியான அன்னிய முதலீடு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் என தெரிவிக்கிறது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அன்னிய முதலீடு
ஜூலை மாதத்தின் 1ஆம் தேதியில் இருந்து 25 வரையிலான சந்தை தகவலின் படி அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் 2.2 பில்லியன் டாலரும், கடன் சந்தையில் 3 பில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளனர். ஆக மொத்தம் கடந்த 25 நாட்களில் 5.2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டு துறை
மத்திய அமைச்சகம் இந்திய காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை 49 சதவீதத்திற்கு உயர்த்தியதை தொடர்ந்து சுமார் ரூ.25,000 கோடி இத்துறையில் அன்னிய முதலீடாக குவிந்துள்ளது.
ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை
மேலும் மத்திய அரசு கூடிய விரைவில் ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அறிவிக்கப்பட்ட அன்னிய முதலீட்டாகான தளர்வை சீர்படுத்தும் என தெரிகிற்து.
சிறப்பான முதலீட்டு வளர்ச்சி
கடந்த சில மாதங்களில் அன்னிய முதலீடு சிறப்பாக இருக்கும் நிலையில் இந்தியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் சுமார் 196 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications