டெல்லி: ஜூலை மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி துறையின் வளர்ச்சி 17 மாத உயர்வை தொட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ஆடர்கள் குவிந்து வருவதாக ஹெச்.எஸ்.பி.சி தெரிவிக்கிறது.
ஹெச்.எஸ்.பி.சி இந்தியாவின் பிஎம்ஐ குறியீட்டின் படி ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்களின் உற்பத்தி சுமார் 53.0 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது, ஜூன் மாதத்தில் 51.5 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடதக்கது. அந்த வளர்ச்சி சிறந்த வளர்ச்சிக்கான அறிகுறியை தெரிவிக்கிறது. பொதுவாக 50 புள்ளிகள் குறைவாக இருந்தால் குறைவான வளர்ச்சி என மதிப்பிடப்படும்.
9 மாத தொடர் உயர்வு
இந்திய உற்பத்தி துறையில் அதிகப்படியான ஆடர்கள் குவிந்து வருவதால் கடந்த 9 மாதமாக இத்துறை சிறப்பான வளர்ச்சியை சந்தித்து வருவதாக எச்.எஸ்.பி.சி தெரிவிக்கிறது. இதனால் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
ஆடர்கள்
உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து ஆடர்கள் குவித்ததன் மூலம் 17 மாத உயர்வை எட்டியது.
விலை உயர்வு
மேலும் உற்பத்தி துறையின் உள்ளிட்டு செலவும், விநியோக செலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்தி துறையின் வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது எனவும் ஹெச்.எஸ்.பி.சி இந்தியா தெரிவித்துள்ளது.
பணவீக்கம்
நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதம் 7.31 சதவீதம் என்ற அளவில் உள்ளது, அதேபோல் மொத்த விலை பணவீக்கம் 5.43 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட 5ஆம் தேதி வெளிவரும் ரிசர்வ் வங்கியின் கொள்கை ஆய்வு பணவீக்கத்தை குறைக்கு சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications