மும்பை: இனி வங்கி ஏடிஎம் உரிமையாளர்கள் பிற வங்கி நகர ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இத்திட்டம் வரைவில் வங்கியாளர்கள் அமல்படுத்த உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.
இந்திய கிராமங்களில் மற்றும் டவுன் பகுதிகளில் சில வங்கிகள் இன்னும் ஏடிஎம் இல்லாமல் இருக்கிறது. இதனை களையும் வகையில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் 5 முறை சேவையை அளிக்க வலியுறுத்தியது. ஆனால் வாங்கியாளர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின்ருக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் துவங்கியது.
வங்கியாளர்கள் தரப்பில்
ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணம் தொடரந்து அதிகரித்து வருவாதல் இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் இத்தகைய சேவையை அளிக்க முடியாது என தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி
ஆனால் ரிசர்வ் வங்கி பொருத்த வரை இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வங்கி சேவை பெற வேண்டும் என்பதேயே குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த போச்சு வார்த்தையில் ஏடிஎம் பயன்பாட்டு முறையை குறைத்து கொண்டு சேவையை இந்தியா முழுவதும் அளிக்க வங்கியாளர்கள் முடிவு செய்தனர்.
கட்டண அதிகரிப்பு
எனவே வங்கியாளர்கள் பயன்பாட்டு முறையை குறைத்ததை அடுத்து அதற்கான கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்த ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை.
குறைந்தபட்ச உயர்வு
வங்கியாளர்கள் பிற வங்கி ஏடிஎம் சேவைக்கு குறைந்தது 10 சதவீத கட்டண உயர்வை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறது.
வாடிக்கையாளர் பார்வையில்
தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தை வாடிக்கையாளர் பெரிதும் வரும்பிகிறார்கள். மேலும் கிராமங்களில் மக்கள் ஏடிஎம் சேவையை பெற வையிட் லேபில் ஏடிஎம்களை பயன்படுத்தாலாம் என தனியார் ஏடிஎம் அமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வையிட் லேபில் ஏடிஎம் பயன்பாட்டு கட்டணத்தை அரசு நிர்ணம் செய்யக்கூடாது எனவும் இந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. (மக்கள் ரொம்ப பாவம் பாஸ்.. இருக்குற எல்லா காசையும் நீங்களே பிடுங்கிட்டா மக்கள் மாத செலவுக்கு என்ன செய்வாங்க??..)