மும்பை: மத்திய அரசு துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தியதால் அடுத்த இரு வருடங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.5 சதவீதத்தை எளிதாக எட்டிவிடும் என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதார்.
கடந்த ஞாயிறு கிழமையன்று மும்பை சசோன் துறைமுகத்தின் மேம்பாட்டு பணி திட்டத்தை துவக்கி வைத்த கட்கரி, இந்திய வளர்ச்சிக் குறித்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
(Read: Syndicate Bank shares slump 7 per cent as Chairman arrested for taking bribe)
சசோன் துறைமுகம்
துறைமுகம் என்ற உடனே பெரிய பெரிய கப்பல் எல்லாம் வந்து நிற்கும் இடம் என்று கணித்து விட வேண்டாம். சசோன் துறைமுகம் என்பது மும்பையில் மீன்பிடி படகுகள் வந்து நிற்கும் ஒரு சிறு துறைமுகம். இது துறைமுகம் மட்டும் அல்லாமல் அது ஒரு விற்பனை கூடமாகவும் உள்ளது. மேலும் மும்பையில் இத்தகைய பல சிறு சிறு துறைமுகங்கள் இருந்தாலும், சசோன் துறைமுகம் மிகவும் பழமையான ஒன்று.
மேம்பாட்டு திட்டம்
இந்த துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு தேவையான எரிபொருள், குடிநீர், ஐஸ் கட்டிகள் தேவை மற்றும் விநியோகத்தை பூர்த்தி செய்யவும், மேலும் நிறைய படகுகள் வந்து நிற்பதற்கும், புதிய தங்கும் அறை, உணவகம், விற்பனை கடைகள் ரேடியோ டவர் போன்றவற்றை அமைக்க சுமார் 25.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்
மத்திய அரசு கடல் சார்ந்த போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகளவில் குறைக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேம்பாடுகள்
கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தவும், சீர்படுத்தவும், இத்துறை சார்ந்த முக்கிய திட்டங்களை முடுக்கிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உணவு பிரியர்களை கவர கடல் உணவு பூங்கா மற்றும் உணவகத்தை இந்தியாவின் முக்கிய இடங்களில் அமைக்கவுள்ளது.
துறை சார்ந்த முன்னேற்றங்கள்
இத்தகைய துறை சார்ந்த முன்னேற்ற திட்டங்கள் அதிகளவில் அமல்படுத்தப்படுவதால் இந்தியாவில் அனைத்து துறைகளும் மேம்படும். மேலும் மொத்த இந்தியவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உச்சத்தை அடையும். எனவே அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஜிடிபி 8.5 சதவீதத்தை கண்டிப்பாக எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications