மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் 3வது இருமாத கொள்கை மறுஆய்வு அறிக்கையை செவ்வாய்கிழமை வெளியிட்டார். இதில் ரிசர்வ வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைக்கான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றுமும் செய்யவில்லை. இதனால் வங்கி கடன் வட்டியிலும் எந்தொரு மாற்றும் இருக்காது.
மேலும் ரிசர்வ் வங்கி எஸ்.எல்.ஆர் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, இதனால் இந்திய வங்கி அமைப்பில் நீண்ட கால முதலீட்டு திட்டத்தில் அதிகப்பிடியான பண புழக்கம் ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி வகிதம்
இந்த 3வது இருமாத கொள்கை ஆய்வு அறிக்கையில் எஸ்.எல்.ஆர் வகிதம் 22.5 சதவீத்தில் இருந்து தற்போது 22 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த ஆய்வு அறிக்கையிலும் 23 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கத்தை குறைப்பதே இந்த ஆய்வு அறிக்கையின் முக்கிய குறிக்கோள். கடந்த மே மாதம் இந்தியாவில் பணவீக்கம் 8.28 சதவீதமாக இருந்தது, ஆனால் ஜூன் மாதம் இதன் சதவீதம் 7.31 சதவீதமாக குறைந்துள்ளது.
விலைவாசி உயர்வு
இந்த பணவீக்கத்தின் விளைவாக தான் இந்தியாவில் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நாட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தான் ரிசர்வ் வங்கி வட்டி வகிதத்தில் எந்த முக்கிய மாற்றமும் செய்யவில்லை.
சி.ஆர்.ஆர் விகிதம்
மேலும் பிற வங்கி, ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. மேலும் வங்கியார்கள் கணித்தை போலவே ரிசர்வ் வங்கியின் கொள்கை மறுஆய்வில் பெரிய அளவிலான மாற்றும் இல்லை.


Click it and Unblock the Notifications