டெல்லி: பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், மொசாம்பிக், நெதர்லாந்து, மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளில் இந்திய நிறுவனங்கள் சுமார் 9.6 பில்லியன் டாலர் அளவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்துள்ளன.
இந்த ஐந்து நாடுகளில், இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 2013-14 ஆம் ஆண்டில் 9.6 பில்லியன் டாலராகவும், 2012-13 ஆம் ஆண்டில் 5.03 பில்லியன் டாலராகவும், 2011-12-இல் 6.77 பில்லியன் டாலராகவும் இருந்தது.
(Read: 7 reasons why the SBI Magnum Equity Fund is a great buying opportunity)
முதலீட்டு துறை
இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் விவசாயம், சுரங்கத்தொழில், உற்பத்தி மற்றும் நிதிச் சேவை துறையில் முதலீடு செய்திருந்தன.
நிர்மலா சீதாராமன்
"இந்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்த புள்ளி விபரங்கள், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளை வகுக்க எதுவாக இருக்கும், மேலும் இந்த புதிய கொள்கைகள் அனைத்தும் காரப்பரேட் உக்திகளின் ஒரு பகுதி" என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைக்கு அளித்த எழுத்து மூலமான பதிலில் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
வெளிநாடுகளில் செய்யப்படும் மூலதனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த இரு வெவ்வேறு வகைகளில் செயல்படுகின்றன. எனினும் அந்நிய செலாவணி முதலீட்டை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி முதலீட்டு கொள்கைகளை பரிசீலனை செய்யும் என அவர் தெரிவித்தார்.
அன்னிய முதலீடு
பல நாடுகள் இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வதை போல இந்திய நிறுவனங்களும் பிற நாடுகளில் முதலீடு செய்து அதிகளவில் லாபம் பெற்று வருகிறது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications