டெல்லி: மத்திய அரசின் நிதி செலவிடுதலில் உள்ள குறைகளைக் களையவும், புத்துயிரூட்டவும் அதனை சரியான முறையில் உபயோகிக்கவும், இத்துறைக்குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க அரசு செலவினக்குழுத் தலைவராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலனை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
மூத்த அரசு அதிகாரிகள் இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த தகவலில், இந்த முடிவு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் இரண்டொரு நாட்களில் இதற்கான ஆணையை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அருண் ஜேட்லி
நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் அறிவித்த பட்ஜெட்டின் போது புதிய செலவின மறுசீரமைப்பு ஆணையம் ஒன்றை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்குள் வெளியாகியுள்ள இந்த செய்தி, அரசு நிதி நிலைமைகளை நன்கு நிர்வகிக்க முனைப்பாக இருப்பதையே காட்டுகிறது.
எதற்கு புதிய ஆணையம்??
அதிகமான செலவுகள், சரிவர பயன்படுத்தப்படாத அதிக அளவு மானியங்கள், ஏழ்மை ஒழிப்புக்குத் தரப்படும் குறைந்த அளவு முக்கியத்துவம் மற்றும் கீழ்மட்டத்திலுள்ள அதிக அளவு அரசுப் பணியாளர்கள் என பல நிதித் தேவை அதிகம் உள்ள காரணங்களால், அரசு சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
பொருளாதார நிலைமை..
தற்போது நிலவி வரும் இக்கட்டான பொருளாதார சூழலில் வருவாய் ஈட்டுதலில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட புதிய சொத்துக்களை உருவாக்குவதை குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
உணவு மற்றும் எரிபொருள் மானியம்
நிதியமைச்சர் ஜேட்லி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் ஏழை எளியோரை பாதிக்காத வண்ணம் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றிர்கான மானியங்களில் சீரமைக்க வாயிபிருப்பதாகவும், இந்த ஆணையம் நடப்பாண்டு இறுதிக்குள் இது தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்" என்றும் தெரிவித்தார்.
சவால்கள்
"செலவுகளை நிர்வகித்தலும் அரசின் வருவாய் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதுடன் ஏழை எளியோரின் மானியங்களை பாதிக்காத வண்ணம் செயல்படுதலும் தற்போதுள்ள சவால்கள்" என அவர் தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் சரியான தேர்வு எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications