டெல்லி: மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 21 இலட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்ட போது 21 இலட்ச வாடிக்கையாளர்கள் பயன்பாட்டில் இல்லாததை இந்நிறுவனம் கண்டிறிந்துள்ளது.
இந்த இணைப்பு துண்டிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 8.94 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
என்ன காரணம்??
கடந்த 10 வருடமாக வாடிக்கையாளர் தளத்தில் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களை நீக்கும் பொருடாக இணைப்பு துண்டித்தோம். இதன் மூலம் இந்த இணைப்பு எண்ணை மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம்
முன்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கதிர்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து வழங்கப்பட்டு இருந்தது. இதனால் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளரை கூட கணக்கில் காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போதும் வாடிக்கையாளர் தளத்தில் இருந்து ஸ்பெக்ட்ரம் நீக்கப்பட்டது.
எம்.டி.என்.எல்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை போன்று மற்றொரு அரசு தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனமும் 30,304 வாடிக்கையாளர்களை இழந்ததுள்ளது.
சந்தை மதிப்பீடு
அரசு தொலைதொடர்பு நிறுவனங்களின் தரமற்ற சேவைகள் மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்ற சேவைகள் அளிக்கப்படாத காரணங்களால் இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த மே மாதத்தில் 13.27 சதவீதத்தில் இருந்து 12.3 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் எம்.டி.என்.எல் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 4.83 சதவீதமாக குறைந்துள்ளது.
தொலைதொடர்பு அமைச்சகம்
இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்த மத்திய அமைச்சகம் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளது.
நஷ்டம்...
2012-13ஆம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சுமார் 8,198 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை சந்தித்தது. அதேபோல் எம்.டி.என்.எல் நிறுவனம் 5,321.12 கோடு ரூபாய் சந்தித்தது குறிப்பிடதக்கது.