சான் ஜோஸ், காலிபோர்னியா: தனது தயாரிப்புகளை சட்டவிரோதமாக திருடி உலகம் முழுவது விற்றுவந்ததாக ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மீது நான்கு வருடத்திற்கு முன்பு அமெரிக்க நிதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்தது. மேலும் அடுத்த அவ்வழக்கின் விசாரானை தொடர்ந்தது. ஒரு முறை காப்பி அடித்ததால் சாம்சங் நிறுவனம் படும்பாடு சொல்லி மாளாது...
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது தயாரிப்புகளை பயன்படுத்திய பொருட்களை சந்தைப்படுத்த கூடாது (உலகின் எந்த சந்தையிலும் விற்க கூடாது என்பதே இதன் பொருள் ) என நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் இதற்கு நிதிமன்றம் மறுப்பு தெரிவித்துளள்து. (வேண்டா அழுதுடுவேன்... சாம்சங்)
நஷ்ட ஈடு
டெக்னாலஜி திருட்டு குற்றத்திற்காக ஆப்பிள் கேட்ட தொகை 2.2 பில்லியன் டாலர் ஆனால் அவர்களுக்கும் நஷ்ட ஈடாக கிடைத்த தொகை வெறும் 119 மில்லியன் டாலர் தான். நான்கு மாதங்களுக்கும் முன்பு சாம்சங் நிறுவனத்திற்கு நிதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை திருடியதிற்காக 119 மில்லியன் டாலர் அளிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம்
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் நிதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. உலகின் இரண்டு மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளால், சாம்சங் சந்தையில் தனது மதிப்பு அதிகளவில் இழந்தது.
விற்பனைக்கு தடை
இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் 9 தயாரிப்புகளை உலகின் எந்த ஒரு சந்தையிலும் விற்கக் கூடாது என சான் ஜோஸ் நிதிமன்றத்தின் நிதிபதி லூசி கோ அவர்களுக்கு இந்நிறுவனம் மனு அளித்துள்ளது.
9 தயாரிப்புகள்
தி அட்மையர், கேலக்ஸி நெக்சஸ், கேலக்ஸி நோட்டு, கேலக்ஸி நோட்டு 2, கேலக்ஸி எஸ் 3, கேலக்ஸி எஸ் 2 எபிக் 4ஜி டச், கேலக்ஸி எஸ் 2 ஸ்கைராக்கெட், கேலக்ஸி எஸ் 3 மற்றும் ஸ்ட்ரடோஸ்பியர் ஆகிய ஆகும்.
கூத்தாடிக்கு கொண்டாட்டம்...
மேலும் இந்த பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் உயர்தரத்தை பெற்றுள்ளது. ஆனால் சாம்சங் நிறுவனத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக இதன் விற்பனை அதிகளவில் பாதித்துள்ளது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சாம்சங் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் இதன் விற்பனை அளவில் xiaomiமுந்தியுள்ளது. மேலும் ஹெச்டிசி, போன்ற நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications