6000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் மலேசிய ஏர்லைன்ஸ்!!

கோலாலம்பூர்: இரு விமானங்கள் இழப்பு, 400 பயணிகளின் உயிர், நிறுவனத்தின் நிலையற்ற தன்மையின் காரணமாக நிறுவனத்தை அரசு முழூமையாக கைபற்றியது. மேலும் மக்களிடையே நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் இழந்த நிலையில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், மேலும் நிறுவனத்தை நடந்த தனது 20,000 பணியாளர்களில் சுமார் 6000 பேரை பணியில் இருந்து நீக்கவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதனால் இந்நிறுவன பணியாளர்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.

கஜானா

கஜானா

மலேசிய அரசின் முதலீட்டு நிறுவனமான கஜானா, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சுமார் 80 சதவீத பங்குகளை கைபற்றியுள்ளது. மேலும் மீதமுள்ள 20 சதவீத பங்குகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் கைபற்றி, இந்நிறுவனத்தில் பங்குசந்தையில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கை

மறுசீரமைப்பு நடவடிக்கை

சரிவில் தத்தளிக்கும் இந்நிறுவனத்தை 2017ஆம் ஆண்டுக்குள் லாபத்தை ஈட்டும் வகையில் செயல்பட கஜானா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 12 திட்ட அமசங்களை இந்நிறுவனம் தீட்டியுள்ளது, இதில் முக்கியமாக 6 பில்லியன் ரிங்கட் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

 6000 பணியாளர்கள்

6000 பணியாளர்கள்

மேலும் அதிகம் செயல்பாட்டில் இல்லாத இந்நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் நிறுவன செலவில் அதிகப்படியான பணத்தை குறைக்க முடியும் என கஜானா நிறுவனம் கூறியது.

விமான விபத்து

விமான விபத்து

மார்ச் 8ஆம் தேதி மலேசிய விமானம் MH370, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்டது, விமான தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விமான எங்கு தொலைந்து போனது என்ற தெரியாத நிலையில் உள்ளது. அதேபோல் MH17 என்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையேறத்தில் பறந்து கொண்டு இருந்த போது ரஷ்ய ஆதரவு படைகள் ஏவுகணையின் மூலம் இவ்விமானத்தை தாக்கினர் இதில் இருந்த அத்தனை பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாவரும் உயிர் இழந்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+