பெங்களுரூ: இந்திய ஐடித்துறை கடந்த 10 வருடங்களில் பல பரிமாணங்களிள் வளர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் இலட்சக்கணக்கான புது நிறுவனங்கள் உருவாகி வருகியுள்ளது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா மற்றும் விப்ரோ நிறுவனத்தின் வியூக குழு தலைவர் ரஷித் பிரேம்ஜி இருவரும் (இரு நிறுவனங்களும்) இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள சிறு நிறுவனங்களை அதிகளவில் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக வங்கித்துறையில் இயங்கும் சிறு நிறுவனங்களை அதிகளவில் கைபற்ற சிக்கா மற்றும் ரஷித் முடிவு செய்துள்ளனர். வங்கியியல் மென்பொருள் உருவாக்குவதில் இந்தியாவில் தற்போது தலை சிறந்து விளங்குகிறது, இத்துறை செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இத்தகைய திறன்வாய்ந்த சிறு மற்றும் புதிய நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கும்.
47 நிறுவனங்கள்
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விப்ரோ நிறுவனம் சுமார் 37 சிறு நிறுவனங்களை கைபற்றியுள்ளது. இதே காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் 10 நிறுவனங்களை கைபற்றியதாக எக்னாமிக்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
பெரு நிறுவனங்கள்
இந்தியாவின் பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை கைபற்றும் நோக்கம் இருந்ததல்லை, 2003ஆம் ஆண்டு முதல் விப்ரோ முதன்முதலில் இத்தகைய முடிவிற்கு வந்தது. இதை தொடந்து 2005ஆம் ஆண்டு முதல் இன்போசிஸ் நிறுவனமும் இதே பார்முலாவை பின்தொடர்ந்தது.
டேட்டா அனல்டிக்ஸ்
வங்கித்துறை நிறுவனங்களை தொடர்ந்து பெரு நிறுவனங்கள் டேட்டா அனல்டிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் நிறுவனங்களை கைபற்ற ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய நிறுவனங்களை கொண்டு சில்லறை வணிகம் மற்றும் சுகாதாரத்துறையில் தனது செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும் என இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நிறுவனம்
கடைசியாக இன்போசிஸ் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டை சேர்ந்த மேலாண்மை நிறுவனமான லோடுஸ்டோன் என்ற நிறுவனத்தை 350 மில்லியன் டாலருக்கும் கைபற்றியது.
இந்த பார்மூலா தொடரும்...
சிறு நிறுவனங்களை கைபற்றும் நடவடிக்கை அடுத்த நிதியாண்டிற்கு தொடரும் என விஷால் சிக்கா மற்றும் ரஷித் பிரேம்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.
இன்போசிஸ்
நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான சிறு நிறுவனங்களை கைபற்ற முடிவு செய்துள்ளதாகவும், இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் முதல் 250 மில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் - மைக்ரோசாப்ட்
அதேபோல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து இந்தியா மற்றும் உலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களை அதிகளவில் கைப்பற்ற போவதாக தெரிவித்துள்ளனர்.
போட்டியும்... பயமும்...
இந்த சிறு நிறுவனங்களின் வளர்ச்சியின் காரணமாக பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் சந்தையில் குறைந்ததை தொடர்ந்து, இதனை முழுமையாக கைபற்ற பெரு நிறுவனங்கள் துடிப்பதாகவும் சில கருத்துகள் நிலவி வருகிறது.