டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடனான நரேந்திர மோடியின் இன்றைய சந்திப்பில், இந்தியா சந்தையில் தனது அன்னிய முதலீட்டை அடுத்த 5 வருடங்களில் 2 மடங்காக உயர்த்த விரும்புவதாக ஷின்டோ அவர்கள் மோடியுடன் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் ஜப்பான் இந்திய சந்தையில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்தது குறிப்பிடதக்கது.
மோடி அவர்களின் இந்த 5 நாள் பயணம் ஜப்பான் இந்தியாவிடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நட்புறவு மேம்படுத்தும் நோக்கத்துடனே மேற்கொள்ளப்பட்டது. இந்த நட்பு சீனாவுடனான பலவீனத்தை கண்டிப்பாக குறைக்கும் எனவும் கருத்து நிலவுகிறது.
அணுஆயுத ஒப்பந்தம்
மேலும் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பிடித்திருப்பது அணுஆயுத ஒப்பந்தம், இதில் சுமுகமான பேச்சுவார்த்தை இரு நாடு பிரதமர்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.
ராணுவ பயிற்சி
மேலும் இந்திய கடற்படையுடன் ஜப்பான் பயிற்சியில் ஈடுப்படவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில் ராணுவ பயிற்சிக்கு அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
ரயில்வே துறை
மேலும் இந்தியாவில் அதிகவேக ரயில்வே பாதையை அமைப்பது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கணவு, இத்திட்டத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் ஷின்சோவுடன் மோடி அவர்கள் தெரிவித்தார். மேலும் அதுகுறித்து அத்துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஷின்சோ பதிலளித்தார்.
மின் உற்பத்தி
உத்திர பிரதேசத்தில் உருவாக இருக்கும் ஒரு மின்உற்பத்தி நிலையத்திற்கு ஸ்டேட் வங்கி மற்றும் ஜப்பான் பாங்க பார் இண்டர்நேஷ்னல் கோஆப்ரேஷன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 21 பில்லியன் டாலர் ஆகும். இதன் மூலம் ஜப்பானில் இருந்து நீராவி ஜெனரேட்டர் பொருட்கள் வாங்க எதுவாக இருக்கும் எனவும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications