டெல்லி: சில காலமாக இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களிடையே யார் அதிக வாடிக்கையாளர்களை பெருவது என ஒரு அமைத்திப் போர் நடந்து வருகிறது. இதில் ஸ்பைஸ் ஜெட், ஏர்ஏசியா, ஏர் இந்தியா, அவ்வபோது வரும் இண்டிகோ என பல நிறுவனங்கள் இருக்கும் தருவாயில் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது.
இந்நிறுவனம் தனது உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு வெறும் 500 ரூபாய் என்ற கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த அமைதிப் போரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் குதித்துள்ளது.
டிக்கெட் பதிவு
இச்சலுகையில் விமான பயணிகள் வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதியண்று பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பயண நாள் ஜனவரி 16ஆம் தேதிக்கு பிறகு தான் எனவும் ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இண்டிகோ
நேற்று மாலையில் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு பயணத்திற்கு ரூ.999 (வரிகள் உட்பட) என்ற அதிரடியான சலுகைய விட்டது, இதனை சற்றும் எதிர்பாக ஜெட் ஏர்வேஸ் இப்புதிய சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
1 லட்சம் டிக்கெட்
ஓரே நாளில் 1 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இத்துறையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தொடர்ந்து சலுகை வாரி வழங்கி வருகிறது.
விமான பயணமும் பஸ் பயணமும் ஒன்று தான்..
அடுத்த சில வருடங்களில் இந்திய வானில் சுமார் 20க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் பறக்க தயராக உள்ளது, இதனால் விமான கட்டணங்கள் கண்டிப்பாக அடிமட்டத்திற்கு வரும். இதனால் மக்கள் பஸ் பயணத்தை போல விமான பயணத்தையும் மிகவும் சுலபமாக செய்ய முடியும்.