டெல்லி: மத்திய அரசு பிரதமரின் மக்கள் சேமிப்புத் திட்டமான ஜன் தன் யோஜனா திட்டத்தை விளம்பரப்படுத்த சுமார் 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது (இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல..) . இதன் மூலம் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் வங்கிக் கணக்கை வைத்துக்கொள்ள வழி வகை செய்யப்படும்.
ஆர் கே சுவாமி பிபிடிவோ (RK Swamy BBDO) நிறுவனம் இந்த விளம்பரத்தை செய்ய உள்ளது. "அரசு நூறு கோடி ரூபாய்களை முதற்கட்டமாக அடுத்த 30-40 நாட்களில் செலவிடவுள்ளது" என விவரமறிந்த ஒரு அதிகாரி தெரிவித்தார்.
கண்காணிப்பு
"அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனரகம் (DAVP) மூலமாக இதன் செயல்பாட்டையும் விளம்பரத்தின் தாக்கத்தையும் கண்காணித்து வருகிறது" என அவர் தெரிவித்தார்.
ஏழரை கோடி வீடுகள்
எழுச்சிமிகு நிதி சேர்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ஏழரை கோடி வீடுகளில் வங்கிக் கணக்கை வரும் வருடம் ஜனவரி 26ஆம் தேதிக்குள் துவக்க அரசு வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
25 விளம்பர ஏஜென்சிகள் போட்டி
இந்தியாவில் தற்போது 40 சதவிகித மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இவர்களை கவரவும் வங்கி கணக்கு திறக்கும் பணியை வேகப்படுத்தவும் விளம்பரங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற ஜே.டபிள்யு.டி, முத்ரா உட்பட சுமார் 25 விளம்பர ஏஜென்சிகள் போட்டியிட்ட நிலையிலே ஆர்.கே.சுவாமி பிபிடிவோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இப்பணி ஒப்படைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி
ஓப்பந்தம் பெற்ற ஆர்.கே.சுவாமி நிறுவனம், தனது பணிகளை கடந்த ஆகஸ்ட்23ஆம் தேதி இந்த விளம்பரத்தைத் துவங்கி தற்போது 29 மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக செயல்பட்டு வருகிறது.
சங்கீதா ஷெட்டி
"இந்திய அரசு இதற்கான பெயரையும் முத்திரையையும் (லோகோ) பொது மக்களிடம் இருந்து பெற்று எங்களிடம் ஒப்படைத்தது. இந்த உக்தியை நாங்கள் முன்னெடுத்து அதை ஒரு உருமாற்றம் செய்து ஒரு விளம்பரமாக செய்து வங்கி முறையை எளிமையாக்கியுள்ளோம்" என ஆர் கே சுவாமி நிறுவனத்தின் துணை செயல் தலைவர் சங்கீதா ஷெட்டி தெரிவித்தார்.
விளம்பரப்படுத்தும் முறை
பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தை தொலைக்காட்சி மட்டுமல்லாது, இதழ்கள் மற்றும் வானொலி மூலமாகவும், இந்த நிறுவனம் பெரும் விளம்பரப் பணிகளை நாடு முழுதும் சுமார் 77000 மையங்களை அமைத்து அதன் மூலம் கணக்கை சுமார் 1,15,000 வங்கிக் கிளைகளில் துவங்க ஊக்குவித்து வருகிறது.
13 மொழிகள்
அச்சிடப்பட்ட இதழ்கள் மூலமான விளம்பரம் சுமார் 120 முதல் 130 செய்தித்தாள்களில் 13 மொழிகளில் வெளியானது.
முதல் நாள்
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஒன்றரைக் கோடி வங்கிக் கணக்குகள் ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் துவங்கப்பட்டன. "ஏற்கனவே சுமார் 2.14 கோடி கணக்குகளை எட்டிவிட்டதால், அரசு இந்த திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க புதிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications