டெல்லி: டாடா குழுமம், இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய விமான போக்குவரத்து நிறுவனத்தை துவங்கி, சில நாட்களில் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்நிலையில் இக்கூட்டணி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஜெட்லைட் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகளை தன் பக்கம் (விஸ்தாரா நிறுவனத்திற்கு) இழுத்து வருகிறது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூட்டணி நிறுவனத்திற்கு விஸ்தாரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜெட்லைட்
ஜெட்லைட் நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜரான தீபக் ஜோஷி அவர்களை விஸ்தாரா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் இணைத்துள்ளது இக்கூட்டணி.
இண்டிகோ
அதேபோல் இண்டிகோ நிறுவனத்தின் சீனியர் கமான்டர் அஷ்தோஷ் வர்மா விஸ்தாரா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய விமான போக்குவரத்து கழகத்தால் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரி ஆவார்.
சில மாதங்களில்
ஏர் ஆப்ரேட்டர் அனுமதிக்காக காத்துக்கிடக்கும் டாடா குழுமத்தின் விஸ்தாகரா நிறுவனம் அடுத்த மாதம் இறுதிக்குள் மூழு வீச்சில் செயல்பட உள்ளது இதனால் இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய புது விதமான விளம்பர உத்திகளை கையால திட்டமிட்டுள்ளது.
விஸ்தாரா
ஏர் இந்தியா நிறுவனமே டாடா குழுமத்திடம் சுருட்டப்பட்ட விமானங்களின் மூலம் உருவானது என ஒரு கதை உண்டு, இந்நிலையில் டாடா குழுமம் ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் உள்நாட்டு விமானச் சேவையிலும், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் இணைந்ததன் மூலம் பன்னாட்டு விமான போக்குவரத்தில் கால் தடம் பதித்துள்ளது.
உயர் அதிகாரிகள்
இந்த தனியார் கூட்டணி நிறுவனம் தலைமை மனித வள அதிகாரியாக சி.எஸ்.வரதராஜன், தலைமை செயல் அதிகாரியாக பீ தெய்க் யெய், தலைமை வர்த்தக அதிகாரியாக கெய்மிங் டோ, தலைமை நிதி அதிகாரியாக நியாத் மாரு ஆகியோரை நியமித்துள்ளது.
தலைமையகம்
இந்நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளது. முதலில் இந்நிறுவனம் ஒரேஒரு ஏர்பஸ் 320 விமானத்தை கொண்டு செயல்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இதை 5ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளது விஸ்தாரா.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications