மும்பை: இந்தியாவில் தனியார் வங்கி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர்களுக்கான வயது வரம்பை 65 வயதில் இருந்து 70 வயது வரை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை செவ்வாய்கிழமை அறிவித்தது.
வருப்பம்
ஆனால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் 70 வயதிற்குள் எப்போது வேண்டுமானலும் பணிஒய்வு பெற்றுக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதித்யா பூரி
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் இண்டஸ்இன்ட் வங்கித் தலைவர்களான தத்தம் அதித்யா பூரி மற்றும் ரோமேஸ் சாப்டீஸ் ஆகியோர் தங்களின் பணிஒய்வு திட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
பங்குகளின் நிலை உயர்வு
இவர்களின் பணிஒய்வு முடிவுகள் பற்றிய திடீர் முடிவுகளால் இருநிறுவன பங்குகளும் வர்த்தகத்தில் உயர்வை சந்தித்து குறிப்பாக இண்டஸ்இன்ட் வங்கி பங்குகள் சுமார் 2.1 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடதக்கது.
மும்பை பங்கு சந்தை
இன்றைய வர்த்தகம் சரிவுடனே துவங்கியது, இதனால் காலை முதல் பங்குசந்தை மந்தமாக செயல்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாடா பவர் நிறுவனம் சுமார் 1.86 சதவீதம் உயர்ந்துள்ளது, இன்போசிஸ் நிறுவனம் 1.81 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.