மும்பை: ஏ.டி.எம்களில் டெபிட் கார்டு எதுமின்றி இணைய வங்கியியல் மூலம் பணம் எடுக்கும் புதிய சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 10 ஆயிரம் ஏ.டி.எம்.களில் இச்சேவையை பயன்படுத்தி பணத்தை எடுத்து கொள்ளலாம்.
இச்சேவையை பயன்படுத்த என்ன தேவை என்று பார்த்தோமானால் வெறும் மொபைல் எண் மட்டும் இருந்தால் போது. பார்ரா புதுசா இருக்கே!!
திட்டவிரிவாக்கம்
இச்சேவையின் மூலம் நாட்டில் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒரு தனது வங்கி கணக்கில் இருந்து வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட பணம் அனுப்பலாம், அதற்கு பணம் அனுப்பப்படுவோருக்கு மொபைல் எண் இருந்தால் மட்டும் போது.
செயல்பாடு
இதை இண்டர்நெட் பாங்கிங் சேவையில் இருந்து மட்டுமே செயல்படுத்த முடியும். பணம் அனுப்ப நினைபவர் (சென்டர்) முதலில் பணத்தை பெறும் நபரின் (ரிசிவர்) மொபைல் எண், பெயர், மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சென்டருக்கு 4 இலக்க குறியீடும், ரிசிவருக்கு 6 இலக்க குறியீடும் கிடைக்கும்.
பணம் பெறுதல்
சென்டர் பணம் பரிமாற்றத்தை செய்த பின்னர் 2 நாட்களுக்குள் ரிசிவர் 6 இலக்க குறியீடு மற்றும் ரெபரன்ஸ் குறியீடும் பயன்படுத்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை பெறலாம்.
நீங்கள் கூட பயன்படுத்தலாம்
தற்போது ஏடிஎம் பயன்பாட்டை குறைத்துக் கொண்ட வங்கிகள், மக்கள் இச்சேவையின் முலம் பணத்தை பெறலாம். இதில் எந்த விதமான கட்டணங்களும் தற்போது இல்லை என ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கிகள்
நாடு முழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கவரவும், விரைவான சேவை அளித்திடவும் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தையும், இணையதள வங்கி சேவைகளை மையமாக வைத்து செயல்படுகின்றனர்.
ஐசிஐசிஐ வங்கி
அந்த வகையில் வங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதுமுயற்சியாக ஏ.டி.எம். கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் இல்லாமலேயே ஏ.டி.எம்.சென்று பணம் எடுக்கும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications