மும்பை: ஏ.டி.எம்களில் டெபிட் கார்டு எதுமின்றி இணைய வங்கியியல் மூலம் பணம் எடுக்கும் புதிய சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 10 ஆயிரம் ஏ.டி.எம்.களில் இச்சேவையை பயன்படுத்தி பணத்தை எடுத்து கொள்ளலாம்.
இச்சேவையை பயன்படுத்த என்ன தேவை என்று பார்த்தோமானால் வெறும் மொபைல் எண் மட்டும் இருந்தால் போது. பார்ரா புதுசா இருக்கே!!
திட்டவிரிவாக்கம்
இச்சேவையின் மூலம் நாட்டில் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒரு தனது வங்கி கணக்கில் இருந்து வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட பணம் அனுப்பலாம், அதற்கு பணம் அனுப்பப்படுவோருக்கு மொபைல் எண் இருந்தால் மட்டும் போது.
செயல்பாடு
இதை இண்டர்நெட் பாங்கிங் சேவையில் இருந்து மட்டுமே செயல்படுத்த முடியும். பணம் அனுப்ப நினைபவர் (சென்டர்) முதலில் பணத்தை பெறும் நபரின் (ரிசிவர்) மொபைல் எண், பெயர், மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சென்டருக்கு 4 இலக்க குறியீடும், ரிசிவருக்கு 6 இலக்க குறியீடும் கிடைக்கும்.
பணம் பெறுதல்
சென்டர் பணம் பரிமாற்றத்தை செய்த பின்னர் 2 நாட்களுக்குள் ரிசிவர் 6 இலக்க குறியீடு மற்றும் ரெபரன்ஸ் குறியீடும் பயன்படுத்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை பெறலாம்.
நீங்கள் கூட பயன்படுத்தலாம்
தற்போது ஏடிஎம் பயன்பாட்டை குறைத்துக் கொண்ட வங்கிகள், மக்கள் இச்சேவையின் முலம் பணத்தை பெறலாம். இதில் எந்த விதமான கட்டணங்களும் தற்போது இல்லை என ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கிகள்
நாடு முழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கவரவும், விரைவான சேவை அளித்திடவும் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தையும், இணையதள வங்கி சேவைகளை மையமாக வைத்து செயல்படுகின்றனர்.
ஐசிஐசிஐ வங்கி
அந்த வகையில் வங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதுமுயற்சியாக ஏ.டி.எம். கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் இல்லாமலேயே ஏ.டி.எம்.சென்று பணம் எடுக்கும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications