மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி பின் நம்பர் தேவைப்படாத கான்டெக்ட் லெஸ் டெபிட் கார்டுகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான ஒப்புதலையும் ரிசர்வ் வங்கியிடிம் கோரியுள்ளது.
தற்போது எந்த ஒரு கார்டையும் வாடிக்கையாளர் உபயோகிக்கும்போது அதற்கான ரகசிய (பின்) எண்ணை உபயோகிக்க வேண்டும். மெட்ரோ ரயில் அல்லது பஸ் பயணச்சீட்டு போன்ற சில சிறிய அளவிலான செலவுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவே இத்திட்டம்.

"பாதுகாப்பு பெரிதும் இல்லாமல் இருக்கும் இத்தகைய பண அட்டை பரிமாற்றத்திற்கு அதிகப்படியாக ரூ.2,000 மட்டுமே பண பரிமாற்றம் செய்யப்படும்" என எஸ்பிஐ வங்கியின் வர்த்தக யுக்திகள் மற்றும் புதிய வணிகத் துறையின் துணை மேலாண்மை இயக்குனர் எஸ் கே மிஷ்ரா ஒரு பன்னாட்டு செலாவனி மற்றும் பயண க்ரெடிட் கார்டினை அறிமுகப்படுத்தும் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தால், எதிர்காலத்தில் வரும் அனைத்து டெபிட் கார்டுகளும் இது போன்று தொடர்பற்ற அல்லது அண்மைத் தொடர்பு வசதியுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த வங்கி தற்போது இதுபோன்ற புதிய ரக டெபிட் கார்டுகளை சென்னை மற்றும் மும்பை மெட்ரோ நிலையங்களில் சோதனை முறையில் உபயோகித்துவருகிறது. எஸ்பிஐ-யும் மாஸ்டர் கார்டும் இணைந்து இன்று புதிய பன்னாட்டு செலாவணி மற்றும் பயணக் க்ரெடிட் கார்டை அறிமுகப்படுத்தின. இது டாலர், பவுண்ட், யூரோ மற்றும் சிங்கபூர் டாலர் ஆகிய செலாவணிகளில் கிடைக்கும்.
இதைப் பெற ஒரு வாடிக்கையாளர் நூறு ரூபாய் கட்டணமாகச் செலுத்தி மேலும் அதை குறைந்தபட்சம் இருநூறு அமெரிக்க டாலர் மதிப்பு வரை சேமித்துக்கொள்ளலாம்.
எஸ்பிஐ தற்போது மும்பை, சென்னை, டெல்லி மற்றும் பெங்களுரூவில் சுமார் நூறு கிளைகளுக்கு இந்த கார்டினை விற்க அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த பன்னாட்டு செலாவனி கார்டில் மேலும் கனடா டாலர், ஆஸ்திரேலிய டாலர், ஜப்பானிய யென் மற்றும் சவுதி ரியால் ஆகிய நாணயங்களையும் இந்த வங்கி சேர்க்கவுள்ளதாக மிஷ்ரா தெரிவித்தார். இந்த கார்டுகளையும் தொடர்பற்ற முறையில் மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications