டெல்லி: இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தென்இந்தியாவில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இப்புதிய தொழிற்சாலைக்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை ஆந்திர மாநிலத்துடன் செய்துள்ளது, இதற்காக இம்மாநில அரசு ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்திற்கு சுமார் 600 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதன் முலம் வருடத்திற்கு 18 இலட்சம் வாகனங்களை தயாரிக்கவும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 4 தொழிற்சாலைகள்
மேலும் இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 3 தொழிற்சாலைகள் உள்ளது அதில் ஒன்று கட்டுமான பணிகளில் உள்ளது. இதை தொடர்ந்து ஆந்திராவில் இந்நிறுவனம் நான்காவது தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
குஜராத்
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவநம் குஜராத் மாநிலத்திலும் ஒரு தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தையில் உள்ளது.
ஹீரோமோட்டோ கார்ப்
இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தியை ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து துவங்கிய இந்நிறுவனம், 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை முடிந்தைமையால் தற்போது தனிச்சையாக செயல்பட துவங்கியுள்ளது.
ஒப்பந்தங்கள்
நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதால் இந்நிறுவனம் தொழிற்நுட்ப ரீதியாக பல அன்னிய முதலீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் தனது வர்த்தகத்தை விரிவுப்பட்டுத் இந்தியாவின் அண்டைநாடுகளுடனும் ஒப்பந்தம் செய்து வருகிறது.