பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் சிக்கா, தான் பணியாற்றிய எஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை, தொடர்ந்து தன் நிறுவனத்திற்கு இழுத்து வருகிறுகிறார். கடந்த மாதம் எஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தில் இருந்து மைக்கில் ரே மற்றும் சஞ்சய் ராஜகோபாலன் ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளில் அமர்த்திய நிலையில் தற்போது மேலும் இரு அதிகாரிகள் இணைய உள்ளனர்.
எஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் அதிகாரிகளால் இரு நிறுவனங்கள் மத்தியிலும், மென்பொருள் சந்தையிலும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.
யார் அந்த அதிகாரிகள்
எஸ்.ஏ.பி (SAP) நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒப்பந்த மற்றும் மூலோபாய திட்ட குழுவின் மூத்த அதிகாரியான கணபதி சுப்புரமணியன் மற்றும் டெவலெப்மென்ட் ஆர்கிடெக்ட் சீஃப் சங்கர் தாஸ்குப்தா ஆகியோர் வெளியேற தயாராகி உள்ளனர்.
எஸ்.ஏ.பி (SAP) நிறுவனம்
ஐபிஎம் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சங்கர் தாஸ்குப்தா சாப் நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு இணைந்தார், சுமார் 14 வருடம் பணியாற்றிய இவர் தற்போது நிறுவனத்தை விட்டு வலகிறார். அதேபோல் கணபதி சுப்புரமணியன் விஷால் சிக்கா உடன் சுமார் 10 வருடம் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
சிக்காவின் புதிய திட்டங்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்த முதல் விஷால் சிக்கா புதிய தொழிற்நுட்பம் மற்றும் கண்டுப்பிடிப்புகளில் அதிகப்படியான முக்கியதுவம் செலுத்தி வருகிறார். இவருடைய திட்டங்களுக்கு மூளையாள செயல்படபோவது இவர்கள் எனவும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்
மேலும் இன்போசிஸ் தற்போது இந்தியா வாடிக்கையாளர்களை விட அதிகளவிலான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவரவே தீயாய் செயல்பட்டு வருகின்றனர்.