பாஸ்டன்: அடுத்த 5 வருடங்களில் இந்தியா உலகிலேயே அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப்படும் சந்தையாக உருவெடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் ஸ்மார்போன்கள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் தொய்வு குறித்து ஆராய்ச்சி செய்தது.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் விற்பனை சற்று வேகம் குறைந்துள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வு மேற்கொண்டது.
13 சதவீத உயர்வு
இன்னும் ஒரு வருட காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சுமார் 13 சதவீதம் வரை உயரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையை பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டில் சீனாவும், அமெரிக்காவும் உலக அளவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
மொத்த விற்பனை
உலகம் முழுவதும் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 43 சதவீதம் அமெரிக்கா மற்றும் சீனாவில் விற்கப்படுகிறது. மேலும் சீனாவில் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது, இதில் சில நிறுவனங்கள் இந்தியாவிலும் குதித்து விற்பனையில் வெற்றியும் கண்டுள்ளது.
பிற நாடுகள்
ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்கா மற்றும் சீனாவை தவிர லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளிலேயே அதிக அளவில் ஸ்மாரட்போன்களுக்கு வரவேற்பு உள்ளது.
இந்தியா
வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கா, சீனாவை விட உலகிலேயே ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகும் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என இந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.