டெல்லி: 2013ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு செல்ல விசா மறுக்கப்பட்ட முன்னாள் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, பாரத பிரதமர் ஆன அடுத்த சில நாட்களிலே தடை விலக்கப்பட்டு அமெரிக்கவிற்கு அழைப்பு விடுத்தது அந்நாட்டு அரசு.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். முதல் கட்டமாக அங்கு பார்ச்சூன் 500 நிறுவனங்களில், உலக புகழ்பெற்ற 17 நிறுவன தலைவர்களை தனித்தனியாக சந்திக்க உள்ளார்.
17 நிறுவனங்கள்
மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த 17 நிறுவன தலைவர்கள் சந்திப்பில் கூகிள், போயிங், ஐபிஎம், கோல்ட்மேன் சாக்ஸ், மாஸ்டர்கார்டு, பெப்சி, கார்லைல் குழு, கார்கில் குழு, சிட்டி குரூப், மெர்க், கேட்டர்பில்லர், வார்பர்க் பிங்கஸ் மற்றும் ஹோஸ்பிரா ஆகிய நிறுவனங்களின் தலைவர்களை இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திக்க உள்ளார்.
நேருக்கு நேர்
இந்த நேருக்கு நேர் சந்திப்பில் 17 நிறுவன தலைவர்களுடன் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி, பெரும் கட்டுமானப் பணிகள் மற்றும் நகரமயமாக்கல் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெரும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
உற்பத்தி வளர்ச்சி
மேலும் இச்சந்திப்பின் மூலம் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி சுமார் 10 சதவீதம் வளரும் வகையில் முதலீடும், தொழிற்நுட்ப உதவியும் பெற்ற திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
புதிய தொழிற்சாலை
மேலும் நாட்டில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வலியுறுத்தும் வகையில் இச்சந்திப்பு அமையும் எனவும் மத்திய தெரிவித்துள்ளது. இந்திரா நூயி தலைமை வகிக்கும் பெப்சி நிறுவனம் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் பிற நிறுவனங்களும் இந்தியாவில் தனது தொழில்வளர்ச்சியை பெருக்க வேண்டும் என வலியுறுத்தவே இந்த திட்டம்.
எதற்கு விசா தடை விதிக்கப்பட்டது??
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் மோடி அவர்களுக்கு தொடர்புடையதாகவும், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளதாகவும் என பல பொய்யான மற்றும் மெய்யான காரணங்களை காட்டி அமெரிக்கா அரசு அவருக்கு விசா வழங்க மறுத்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications