பெய்ஜிங்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈபே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தும் வரும் அலிபாபா நியூயீார்க் பங்குச்சந்தையில் முதல் நாளிலேயே 25 பில்லியன் டாலர் பெற்று ஒரு புரட்சியை செய்தது. இந்நிலையில் அலிபாபா நிறுவனம் மக்களுக்கு வங்கி சேவை அளிக்க தனியார் வங்கியை அமைக்க விண்ணப்பம் அளித்திருந்தது.
நியூயார்க் பங்குசந்தையில் கிடைக்க வெற்றுக்கு பரிசளிக்கும் வகையில் சீனாவில் தனியார் வங்கி சேவை அளிக்க இந்நிறுவனத்திருக்கும் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது.
புதிய வங்கி
அலிபாபா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜெஜியாங் ஆன்ட் ஸ்மால் மற்றும் மைக்ரோ பைனான்சியல் சர்விசஸ் குருப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய வங்கியை அமைக்கிறது. இவ்வங்கியில் இரு நிறுவனங்களும் சுமார் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.
வங்கிச் சேவையில் அலிபாபா
ஆன்லைன் வங்கி பண பரிமாற்றம் மற்றும் சொத்து மேம்பாடுகளில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அனுபவம் இருப்பதால் இந்நிறுவனம் மக்களுக்கும் நிறைவான மற்றும் முழுமையான சேவை வழங்கப்படும் சீன அரசு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்திற்கு ஒரு உந்து சக்தி
சீனாவில் வங்கித்துறையில் அல்லாத ஒரு நிறுவனம் வங்கி அமைப்பது இதுதான் முதல் முறை, மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் வங்கிகள் பெரும் உந்து சக்தியாக இருக்கும் எனவும், வங்கித்துறையில் ஒரு போட்டித்தன்மையை உருவாக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முதலீடு
வங்கியை அமைப்பதன் மூலம் இந்நிறுவனம் பெரும் முதலீட்டை பெரும். இதனை கொண்டு அலிபாபா நிறுவனம் உலகநாடுகளில் இதன் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், வரிவுப்படுத்தவும் உதவும்.
ஜாக் மா
அலிபாபா நிறுவனம் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடபட்டதன் விளைவாக 25 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சீனாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications