சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பட்டாசு மற்றும் புத்தாடைகள். இப்படி இருக்கும் போது இந்தியாவில் அதிகளவில் பட்டாசு தயாரிக்கப்படும் சிவகாசியில் இந்த வருடம் விற்பனையும் தயாரிப்பு மங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சீனாவில் இருந்து கள்ளத்தினமாக இறக்குமதி செய்யப்படும் பட்டசுகள், இதுகுறித்து மத்திய நிதி மற்றும் வர்த்தகத்துறை மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் சிவகாசு பட்டாசு உற்பத்தியாளர்கள் மனு அளித்திருந்தனர்.
இறக்குமதி
இது குறித்து அவர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்யவேண்டும் என்றால் வெடிமருந்து சட்டத்தின் கீழ் அனுமதி பெறவேண்டும், இதுவரை இத்தகைய அனுமதி யாரும் பெற்றதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார்.
காவல்துறை தன் கடமையை செய்யும்
சீன நாட்டு பட்டாசை யாரேனும் விற்பனை செய்தால், அது குறித்த தகவலை பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவிக்கலாம். சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன, அதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
கடத்தல்
சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் வந்தால், அது நமது பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களையும் பெரிதும் பாதிக்
நாடாளுமன்றத்தில்..
இப்பிரச்சனை குறித்து சில மாதங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கு நிர்மலா சீதாராமன் தனது தாய் மொழியான தமிழ் பதில் அளித்தார்.