டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஒரு மாத காலமாக நீரிழிவு நோய் மற்றும் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் தனிப்பிரிவு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் இன்று உடல்நலம் தேறியதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதனால் இம்மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கும் உலக வங்கியுடனான சந்திப்பிற்கு அருண் ஜேட்லி செல்வார் என நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கிறது.
மருத்துவமனையில் ஒரு மாதம்
61 வயதாகும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களுக்கு நீரிழிவு நோய் முற்றியது, இதன் தொடர்ச்சியாக அவருக்கு நோயின் தாக்கத்தை குறைக்க டெல்லி தனியார் மருத்துவமனையில் அவரின் வயிற்றுப்பகுதியில் சில முக்கிய அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார்.
தொற்று
இதை தொடர்ந்து அருண் ஜேட்லி அவர்கள் நாடாளுமன்றத்தில் நிதித்துறை மற்றும் பாதுகாப்பு துறை என இரு துறைகளும் கவணித்து வருகிறார். வேலை நிமித்தமாக பலர் அவர்களை சந்தித்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் அவருக்கு தொற்று பரவியது.
தனிப்பிரிவு சிகிச்சை
இதனால் அவரை தனிப்பிரிவிக்கு மாற்றப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அருண் ஜேட்லி
மேலும் கடந்த ஒரு மாதமாக இவர் செயல்படாமல் இருக்கும் காரணத்தால் இரு துறை பணிகளும் முடங்கியது.
அமெரிக்க பயணம்
தற்போது தனிப்பிரிவு சிகிச்சை முடிவு பெற்று டெல்லி AIIMS மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அருண் ஜேட்லி அக்டோபர் 10-12ஆம் தேதிகளில் நடைப்பெற உள்ளது இதில் அவர் கலந்துகொள்வார் என நிதித்துறை வட்டாரங்கள் தெரவிக்கிறது. மேலும் இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அமித் குப்தா அவரது அமெரிக்க பயணத்தை குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதலி அளிக்கவில்லை.