டெல்லி: இந்திய தொலைதொடர்பு சேவைகளில் விரைவாக வளர்ந்து வரும் பிரிவுகளில் மொபைல் இண்டர்நெட் மற்றும் டேட்டா சேவைகள் மிக முக்கியமானவை. இந்நிலையில் அதிவிரைவான இண்டர்நெட் சேவை வழங்கி அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் மொபைல் இண்டர்நெட் சேவைக்கான கட்டணங்களை லாப நோக்கத்துடன் உயர்த்தி வந்தாலும், சில நிறுவனங்கள் இக்கட்டணங்களை அதிகளவில் குறைத்து வருகிறது.
எம்.டி.எஸ்
இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இல்லாத எம்.டி.எஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரவும், அதிக வாடிக்கையாளர்களை தன் நிறுவனத்துடன் இணைத்திடவும், இந்நிறுவனம் தனது மொபைல் டாங்கிள் இண்டர்நெட் கட்டணத்தை சுமார் 33 சதவீதம் வரை குறைத்துள்ளது.
கட்டணங்கள்
இந்நிறுவனத்தின் எம்பிளேஸ் அல்ட்ரா வை-பை கட்டணம் 1499 ரூபாயில் இருந்து தற்போது 999 ரூபாய் வரை குறைத்துள்ளது. அதேபோல் 10ஜிபி டேட்டா கொண்ட திட்டத்திற்கு தற்போது 1749 ரூபாய் செலுத்தினால் போதும்.
100% கட்டண உயர்வு
மேலும் கடந்த 4 மாதங்களில் மொபைல் இண்டர்நெட் கட்டணங்களை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக முக்கிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளது.
3ஜி மற்றும் 4ஜி
இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளின் வரவேற்பு சிறப்பாக உள்ளதாகவும், அடுத்த 5 வருடங்களில் இச்சேவையின் மூலம் நிறுவனங்கள் குறிப்பிடதக்க அளவில் லாபங்களை பெரும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
மேலும் இந்தியாவில் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், ஏர்டெல் நிறுவனம் தான் வாடிக்கையாளர் எண்ணிக்கை தான் அதிகம் இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்தின் தரமான சேவை.
சந்தை பங்குகள்
இந்தியாவில் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மட்டும் சுமார் 57 சதவீதம் சந்தையை பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications