பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் 6 நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன், நாராயணமூர்த்தி அவர்களை பேலவே நிறுவன பொறுப்புகளில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதி விலகுகிறார்.
இந்நிறுவனத்தில் 33 வருடமாக பணியாற்றிய கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கடந்த ஜூன் 14ஆம் நாள் நிர்வாக துணை தலைவராக பதவி மற்றும் பொறுப்புகளை குறைந்துக்கொண்டார். இதை தொடர்ந்து தற்போது நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளில் இருந்து ஒய்வுபெற அவர் திட்டமிட்டுள்ளார்.
ஃபர்வெல் பார்ட்டி
அக்டோபர் 10ஆம் தேதி நிறுவனத்தில் இருந்து விலகும் நாராயணமூர்த்தி மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் ஃபர்வெல் பார்ட்டி கொடுத்தது, இதில் இந்நிறுவனத்தின் நிறுவனர்களான நந்தன் நிலேகனி, ஷிபுலால், தினேஷ் மற்றும் ராகவன் ஆகியோருடன் நாராயணமூர்த்தி மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
கடைசி தலைவர்
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கடைசி நிறுவனர் கிரிஸ் கோபால கிருஷணன், தனது பொருப்புகளை தற்போதை சீஇஓவான விஷால் சிக்கா அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அடுத்தது என்ன அரசியல் தானே??
நிறுவனத்தை விட்டு வெளியேறும் கிரிஸ் அவர்களிடம் அடுத்தது நந்தன் நிலகேனி அவர்களை போல அரசியலில் குதிக்க திட்டமா?? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், "பொலிடிக்ஸ் இஸ் நாட் மை கப் ஆஃப் காபி" என்றாக், மேலும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு பிறகு நான் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் கவனம் செலுத்தபோகிறேன் என்று தெரிவித்தார்.
பங்கு சந்தையில்
33 வருட இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கியமான சாதனையாக கருதுவது, இந்நிறுவனம் பங்குச்சந்தையில் குதிக்கும்போது 28.50 கோடி ரூபாயாக சந்தை மதிப்பீடு இருந்தது. ஆனால் இப்போது 2 இலட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது.
பங்குகள் சரிவு
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 5 நாட்களில் சுமார் 5 சதவீதம் சரிந்துள்ளது.