பெங்களுரூ: அக்டோபர் 6ஆம் தேதி பிளிப்கார்ட் நிறுவனம் நடந்திய பிக் பில்லியன் டேவில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் வியாபாரிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளதாகவும் புகார்கள் வர்த்தக மற்றும் தொழிற்துறைக்கு வந்தது.
இதையடுத்து இத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என்றும் புதிய சட்ட திட்டங்கள் அமைக்கப்படும் என்று கூறியதாக தகவல்கள் பத்திரிக்கைகள் மற்றும் ஊடங்கள் தெரிவித்து வருவது பொய்யானது என்று அவர் இன்று தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் தான் இப்புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்று மட்டுமே கூறியதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
புகார்களில் இருந்து மன்னிப்பு வரை...
பிக் பில்லியன் டேவில் நடந்த குளறுபடிகளில் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது, இதனால் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்குமாறு புகார்களை அளித்தனர். இப்பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள நடந்த குளறுபடிகளுக்கு பிளிப்கார்ட் நிறுவன தலைவர்கள் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடதக்கது.
விசாரணை
மேலும் தொழிற்துறைக்கு கிடைத்துள்ள புகார்களின் பேரில் பிளிப்கார்ட் நிறுவன தலைவர்களிடம் தொழிற்துறை அமைச்சகம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் விசாரணை செய்து வருகிறது.
பெங்களுரூ
காபி துறையின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களுரூ வந்த நிர்மலா சீதாராமன் பாஜக தலைமை அலுவலகத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மீது வழக்கு எதும் தொடுக்க போவதில்லை, விசாரணை மட்டுமே நடந்த திட்டமிட்டுளோம். விசாரணையின் முடிவில் நிலவரம் தெரிய வரும் என பத்திரிக்கையாளர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.
புதிய சட்ட திட்டங்கள் எல்லாம் இல்லை...
இத்தகைய புகார்களின் மூலம் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் புதிய சட்டதிட்டங்களை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளதாக வந்த செய்திகளை மறுத்துளார் நிர்மலா சீதாராமன்.
ஆன்லைன் வர்த்தகம்
பிளிகார்ட் நிறுவனத்தின் இந்த குளறுபடிகள் மூலம் நாட்டின் ஆன்லைன் சந்தை வர்த்தகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்படும் என்று நினைத்த பலருக்கும் இது ஆச்சரியமாக இருக்கும். தற்போது வெறும் விசாரணை மட்டும் தானாம்...
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications