டெல்லி: ஜப்பான் நாட்டு பல துறை நிறுவனங்களில் சாப்ட்பாங்க் நிறுவனம் முதன்மையானது, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணத்தில் இந்நிறுவனத்தின் தலைவர் மசயோஷி சன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்தார். இதனை ஏற்று இந்தியாவிற்கு வந்த அவர், நேற்று காலையில் பிரதமரை சந்தித்தார்.
இச்சந்திப்பில் இந்தியாவின் ஐடி மற்றும் தொலைதொடர்பு துறையில் 10 பில்லியன் டாலர் அதாவது 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார் மசயோஷி சன்.
சாப்ட்பாங்க்
இந்நிறுவனம் ஜப்பான் நாட்டில் தொலைதொடர்பு மற்றும் இண்டர்நெட் துறையில் முதன்மையாக உள்ளது. இதே பார்மூலாவில் இந்தியாவின் டெலிகாம் மற்றும் இகாமர்ஸ் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்ய. ஏற்கனவே இந்நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தொலைதொடர்பு அமைச்சர்
இந்த முதலீட்டு குறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களை நேற்று மதியமே சந்தித்தார். அதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் மசயோஷி சன் தலைமையிலான சாப்ட்பாங்க் நிறுவனம் இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் இகாமர்ஸ் துறையில் 10 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பல துறை நிறுவனம்
சந்தை முதலீட்டு அளவில் இந்நிறுவனம் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்புடையது சாப்ட்பாங்க். இந்நிறுவனம் பிராட்பேன்டு, பிக்ஸ்டு லைன் டெலிகாம், இகாமர்ஸ், பைனான்ஸ், மீடியா மற்றும் மார்கெட்டிங் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் இந்நிறுவனம் இதற்கு முன் இந்தியாவின் இன்மோபி மற்றும் ஹைக் போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
10 வருடம்
மேலும் மசயோஷி சன் அவர்கள் தனது முதலீட்டின் மூலம் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 0.5 டிரில்லியன் டாலர் அளவு வர்த்தகம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இவரது முதலீட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் வர்த்தக ரீதியில் நட்புறவு வலிமையாகும்.
ஸ்மார்ட சிட்டி
மத்திய அரசின் 7,060 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றி ரவி சங்கர் பிரசாத் அவரிடம் தெரிவித்தார்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications