தொழிற்சாலையை விற்க தமிழக அரசு ஒப்புதல்... மகிழ்ச்சியில் நோக்கியா நிறுவனம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மொபைல் வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறிய நோக்கியா நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையின் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு.

 

இவ்வழக்கின் தீர்ப்பும் தமிழக அரசிற்கு சாதகமாக வந்ததுள்ள நிலையில் வரி ஏய்ப்பு செய்த தொகையைக் கொடுக்க நிறுவன கணக்கில் பணம் இல்லை என நோக்கியா தெரிவித்தது. பணத்தை செலுத்த என்ன வழி???

ஒப்புதல்

ஒப்புதல்

இதனால் தொழிற்சாலையை விற்க இந்நிறுவனம் முடிவு செய்து, இதற்கான தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை விற்க அனுமதி வழங்கியது.

நிறுவனத்தை விற்க வழிவிடுங்கள்!! பணம் கூட வேண்டாம்... நோக்கியாவின் புலம்பல்..நிறுவனத்தை விற்க வழிவிடுங்கள்!! பணம் கூட வேண்டாம்... நோக்கியாவின் புலம்பல்..

எஸ்குரோ கணக்கு

எஸ்குரோ கணக்கு

தொழிற்சாலையை விற்கப்படும் அனைத்து தொகையும் மூன்றாம் கணக்கான எஸ்குரோ கணக்கில் வைக்க நோக்கியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதன் மூலம் தமிழக அரசு இத்தொகையை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

வருவாய் துறை ஒப்புதல்
 

வருவாய் துறை ஒப்புதல்

மேலும் தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து இந்நிறுவனம் வருமான வரித்துறையிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் இதற்கான பணிகளை நோக்கியா இந்தியா செய்து வருகிறது.

குத்தகை

குத்தகை

தொழிற்சாலை நோக்கியா நிறுவனத்தின் பெயரில் இருந்தாலும், தொழிற்சாலை அமைந்துள்ள நிலம் தமிழக அரசு சொந்தமானது. தமிழக அரசு நிலத்தை நேக்கியா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

தமிழக அரசும்.. மொபைல் உற்பத்தியும்..

தமிழக அரசும்.. மொபைல் உற்பத்தியும்..

நோக்கியா நிறுவனம் அளித்த மனுவின் படி, நிலம் தமிழக அரசிற்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில், தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த நோக்கியா நிறுவனம் பரிந்துறை செய்தது. தமிழக அரசிற்கு இத்துறையில் முன் அனுபவம் மற்றும் அதற்கான செயல் திட்டங்கள் இல்லாத காரணத்தால் நிறுவனத்தை விற்க ஒப்புதல் அளித்ததுள்ளது.

நோக்கியா தொழிற்சாலை

நோக்கியா தொழிற்சாலை

இந்நிறுவனத்தின் உற்பத்தியை கடந்த மாதம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதற்குமுன் இந்நிறுவனத்தின் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு நிறுவனம் வி.ஆர்.எஸ் வழங்கப்பட்டது. இதில் 500 பணியாளர்கள் மட்டும் வி.ஆர்.எஸ் பெறாமல் இருந்தனர், இவர் இந்நிறுவனத்தின் விற்பனையை எதிர்த்து வழக்கு தொடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கைபற்றிய போது இத்தொழிற்சாலையில் இருந்து 500 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டது குறிப்பிடதக்கது.

நவம்பர் 1 முதல் சென்னை தொழிற்சாலை மூட திட்டம்!! நோக்கியாநவம்பர் 1 முதல் சென்னை தொழிற்சாலை மூட திட்டம்!! நோக்கியா

தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் நோக்கியா!!தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் நோக்கியா!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu backs Nokia's plan

The State government backs Nokia’s proposal that the Centre unfreeze the Sriperumpudur property for its sale.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X