மும்பை: இந்தியாவில் வங்கிகளை திறக்க நாட்டின் 25 முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்த நிலையில் அமைதியாக வந்து ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமங்களை தட்டிச் சென்றது ஐ.டி.எஃப்.சி மற்றும் பந்தன் பைனான்சியல் நிறுவனங்கள்.
இவ்விரு நிறுவனங்களும் ஏற்கனவே நாட்டு மக்களுக்கு நிதிச்சேவை அளித்து வந்த நிலையில், முழுமையான வங்கியாக செயல்பட நாட்டின் பல்வேறு இடங்களில் வங்கிக் கிளைகள் மற்றும் பணியாளர்களை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஐ.டி.எஃப்.சி வங்கி மேலும் 1,500 பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐ.டி.எஃப்.சி நிறுவனம்
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான சுனில் காக்கர் கூறுகையில்,"தற்போது நிறுவனத்தில் 600 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் நாட்டில் முழுமையான வங்கியாக செயல்படும் முன் சுமார் 1500 புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு
மேலும் இந்நிறுவனம் அடுத்த நிதியாண்டின் துவக்கும் முதல் நிறுவனத்தில் ஆட்சேப்பு பணி துவங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்நிறுவனம் முழுமையான வங்கியாக செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்துள்ளது.
முக்கிய பணியாளர்கள்
ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரியான விக்ரம் லிமாயே அவர்கள் கூறுகையில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழு, வங்கி மற்றும் வங்கி கிளையின் நிர்வாக இயக்குனர் போன்ற முக்கிய பணியாளர்களின் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. மேலும் நிறுவன அமைப்பிற்கு தேவைப்படும் இதர பணியாளர்களை பகுதி பகுதியாக நிறுவனத்தில் சேர்க்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி
டாடா, ரிலையன்ஸ் மற்றும் பிர்லா குழுமம் உட்பட சுமார் 27 நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ஐ.டி.எஃப்.சி மற்றும் பந்தன் நிறுவனத்தை இந்தியாவில் வங்கிச்சேவை அளிக்க சில மாதங்களுக்கு முன் தேர்வு செய்துள்ளது. மேலும் அடுத்த 18 மாதங்களில் இந்நிறுவனம் முழுமையான வங்கியாக செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்துள்ளது.
இந்திய வங்கிகள்
இந்தியாவில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றம் அதன் இணைப்பில் 7 வங்கிகள், 77 மாநில வங்கிகள், 19 தனியார் வங்கிகள், 32 பன்னாட்டு வங்கிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் 29 வெளிநாட்டு வங்கிகள், இந்நிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது இப்பட்டியலில் பந்தன் மற்றும் ஐ.டி.எஃப்.சி ஆகிய 2 புதிய வங்கிகளும் இந்திய வங்கியியல் அமைப்பில் இணைகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications