சென்னை: இந்திய மோட்டார் சட்டத்தில் மாற்றம் செய்த ஒப்புகல் கிடைத்த பின்னர் மத்திய அரசு கப்பல் துறையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப சட்ட திட்டங்களை மற்ற திட்டமிட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தியாவில் கப்பல் போக்குவரத்து மிகவும் பின்தங்கி உள்ளது. இதனை மேம்படுத்த துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஏற்ப வழிதடங்கள் மட்டும் அல்லாது புதிய மற்றும் நடப்பு காலகட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக விடிவமைக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் தேவை என சென்னையில் மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்டிரி ஒருங்கிணைத்த கூட்டத்தில் கட்கரி இவ்வாறு தெரிவித்தார்.
1988 மோட்டார் சட்டத்தில் செய்யப்படும் மற்றத்தின் படி, இனி ஆர்.டி.ஒ அலுவலகங்கள் தேவையில்லை என்றும், இதன் மூலம் அங்கு பல அயிரம் கோடி ஊழல் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். புதிய சட்டதிட்டங்கள் முலம் இதை தடுக்க முடியும் எனவும் கூறினார்.

அதேபோல் கப்பல் துறையிலும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் வகையில் சட்டங்களை மாற்றியமைக்கப்படும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கப்பல் துறையின் ஆன்லைன் விடிவத்தில் யாரேனும் விதிகளைமீறினால் உடனடியாக அவர்களது உரிமங்களை ரத்து செய்யப்படும், மேலும் இதற்கு முன் இத்துறையில் நடந்த குளறுபடிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications