கரூர்: பழனி - பொள்ளாச்சி இடையேயான ரயில்பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு விட்டாதால் 3-மாதத்திற்குள் ரயில் சேவை தொடக்கப்படும் என்று கரூரில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
கரூர் ரயில் நிலையத்திற்கு ராகேஷ் மிஸ்ரா வருகை தந்தார். அவருடன் ரயில்வே துறை அதிகாரிகளும் ரயில் நிலையத்தை ஆய்வு செய்னர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேற்று பாலக்காடு கோட்டத்தை ஆய்வு மேற்கொண்டதாகவும் இதனையடுத்து இன்று சேலம் கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, கரூர், திருச்சி ரயில் நிலையங்களை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பழனி - பொள்ளாச்சி இடையேயான ரயில்பாதையில் பணிகள் முடிந்து விட்டதால், 3 மாத்திற்குள் ரயில் சேவை தொடங்கப்படும், பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போதனூர் ரயில் பாதைகளுக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டவுடன் விரைந்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.