சென்னை: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அனந்த் கீதே.
நேற்று சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சர் அனந்த் கீதே. அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய கனரக தொழில் துறை மிகுந்த அக்கறை எடுத்து செய்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள கனரக தொழிற்சாலைகளில் உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் திருச்சியில் பெல் தொழிற்சாலை உள்ளது.
அதுபோன்ற புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. மராட்டியத்தில் உள்ள பெல் தொழிற்சாலையை புதிதாக விரிவுபடுத்துவதற்கான திட்டம் உள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.