சென்னை: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காதவர்களிடம் இருந்து பணத்தை பெற துப்பறியும் நிபுணர்களின் உதவி பெறப்படுகிறது.
வங்கிகள் தங்களிடம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காதவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க துப்பறியும் நிபுணர்களின் உதவியை நாடி வருகின்றன. இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் துப்பறியும் நிபுணர்களின் உதவியை நாடுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்தியன் வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிய 50 பேரை துப்பறியும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகார வர்கத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு ஆண்டுகளில் ரூ.300 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என்று துப்பறியும் நிபுணர்கள் தேடியபோது தான் அவர் வங்கியில் கடன் வாங்கி அதை வைத்து தனது மகனின் பெயரில் மேலும் ஒரு கம்பெனியை துவங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் ரூ. 160 கோடியை இதுவரை வங்கி பெற்றுள்ளது. மீதமுள்ள பணத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து சி இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி. இளங்கோவன் கூறுகையில்,
கடன் வாங்கியவர்கள் அளித்த ஆவணங்களில் இருக்கும் முகவரிக்கு சென்று அங்கு அக்கம்பக்கத்தினர், ஆட்டோ டிரைவர்களிடம் விசாரிப்போம். அடுத்தபடியாக வாக்காளர் அடையாள அட்டை, பிஎஸ்என்எல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்ப்போம் என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த காலிறுதியாண்டில் இனி கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த ரூ.55 கோடியை துப்பறியும் நிபுணர்கள் மூலம் வங்கிகள் மீட்டுள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications