டெல்லி: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ காப்பீடு அளிக்க மத்திய அரசு நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் வருகிற 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டத்தை மேம்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
சுகாதார அமைச்சகம்
ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் தற்போது தொழிலாளர் அமைச்சகத்திலன் கட்டுப்பாட்டில் உள்ளது இதனை சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டு புதிய திட்டம் செயல்பட உள்ளது. அதன்படி அனைவருக்குமான தேசிய சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வரையறை செய்ய சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது.
புதிய திட்டம்
ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டத்தை வரையறைகளை மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டம்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆர்எஸ்பிஒய்ஐ தொழிலாளர் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் தேசிய சுகாதார உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. பின்பு இரண்டையும் இணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கியமானவை
அனைவருக்குமான காப்பீடு திட்டம் 50 அத்தியாவசிய மருந்துகள், முக்கிய பரிசோதனைகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட 30 மாற்று மருந்துகளை சலுகை விலையில் பெற வழிவகுக்கும். இவை ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கும். மற்றவர்கள் சிறு தொகையை செலுத்தி சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம்.
ஐக்கிய முற்போக்கு கட்சி
நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டத்திற்கு அடித்தளமாக விளங்கும் ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் ஐக்கிய முற்போக்கு கட்சி ஏப்ரல் 2008ஆம் ஆண்டும் துவங்கியது. இதன்மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு சுமார் 30,000 அளவிற்கு ஸ்மார்ட்கார்டு முறையில் மருத்துவ உதவிகள் கிடைத்தது வந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications