டெல்லி: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ காப்பீடு அளிக்க மத்திய அரசு நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் வருகிற 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டத்தை மேம்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
சுகாதார அமைச்சகம்
ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் தற்போது தொழிலாளர் அமைச்சகத்திலன் கட்டுப்பாட்டில் உள்ளது இதனை சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டு புதிய திட்டம் செயல்பட உள்ளது. அதன்படி அனைவருக்குமான தேசிய சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வரையறை செய்ய சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது.
புதிய திட்டம்
ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டத்தை வரையறைகளை மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டம்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆர்எஸ்பிஒய்ஐ தொழிலாளர் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் தேசிய சுகாதார உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. பின்பு இரண்டையும் இணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கியமானவை
அனைவருக்குமான காப்பீடு திட்டம் 50 அத்தியாவசிய மருந்துகள், முக்கிய பரிசோதனைகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட 30 மாற்று மருந்துகளை சலுகை விலையில் பெற வழிவகுக்கும். இவை ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கும். மற்றவர்கள் சிறு தொகையை செலுத்தி சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம்.
ஐக்கிய முற்போக்கு கட்சி
நேஷ்னல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன் திட்டத்திற்கு அடித்தளமாக விளங்கும் ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் ஐக்கிய முற்போக்கு கட்சி ஏப்ரல் 2008ஆம் ஆண்டும் துவங்கியது. இதன்மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு சுமார் 30,000 அளவிற்கு ஸ்மார்ட்கார்டு முறையில் மருத்துவ உதவிகள் கிடைத்தது வந்தது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications