"மீண்டும் 2008" ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் ஜெர்மன் அதிபர்!!

பெர்லின்: ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் செவ்வாய் கிழமை ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார மந்த நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளார். இவரின் அறிவிப்பு அந்நாட்டின் பொருளாதார மற்றும் நிதியியல் வல்லுனர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் 3 மாதங்களுக்கு முன்னரே வல்லரசு நாடுகள் கடுமையான பொருளாதார மந்த நிலைக்குள்ளாகும் (recession) என தெரிவித்தார். இவர் 2008ஆம் ஆண்டு நடந்த பொருளாதார மந்த நிலையா இவர் சில வருடங்களுக்கு முன்னதாகவே கணித்தது குறிப்பிடதக்கது.

ஏஞ்சலா மெர்கல்

ஏஞ்சலா மெர்கல்

இக்கடுமையான நிலையை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் மிகவும் வேகமாகவும் விவேகமாக செயல்பட வேண்டும், மேலும் பாதுகாப்பான முதலீட்டு துறை அறிந்துகொண்டு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என ஏஞ்சலா மெர்கல் ஐரோப்பாவின் முக்கிய தொழில்அதிபர்கள் கலந்து கொண்ட கூட்டதில் தெரிவித்தார்.

வர்த்தக உடன்படுக்கை

வர்த்தக உடன்படுக்கை

மேலும் ஐரோப்பிய நாடுகள் தற்போது கனடா மற்றும் அமரிக்கா நாடுகளுடன் முக்கிய வர்த்தக உடன்படுக்கை பற்றி பேச்சுவார்த்தையில் விரைவில் இறுதிகட்ட முடிவுகளை எடுக்க உள்ளதாக ஜெர்மனி பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசியாவின் தாக்கம்

ஆசியாவின் தாக்கம்

இன்றைய பொருளாதார நிலையில் உலகளவில் ஆசிய சந்தை சக்திவாய்ந்த சந்தையாக உருவெடுத்துள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு கணிசமான அளவாகவே உள்ளது.

வாய்ப்பு அதிகரிப்பு

வாய்ப்பு அதிகரிப்பு

கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் ஃப்ரி டிரேடு ஒப்பந்தம் செய்துவிட்டால் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பல வாய்ப்பு உருவாகும் என்று மெர்கல் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+