டெல்லி: இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் இடையே நேற்று 2.5 பில்லியன் டாலர் அளவு முதலீடு திட்டங்கள் கொண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. புதன்கிழமை டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வந்திருந்தனர், இக்கூட்டத்தில் இந்திய நிறுவனங்கள் சீனா பல ஒப்பந்தங்கள் செய்திருந்தது.
ஜியா போவாலாங்
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜேஜியாங் மாகானத்தின் மக்கள் காங்கிரஸின் தலைவர் ஜியா போவாலாங் கூறுகையில் "இப்பயணத்தில் இந்தியா நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் சுமார் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்" என்று கூறினார்.
அருண் ஜேட்லி
மேலும் இக்கூட்டம் முடிந்த பின் சீனாவில் இருந்து வந்திருந்த சில உயர் அதிகாரிகள் மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரான் அருண் ஜேட்லி அவர்களை சந்தித்தனர்.
விருப்பம்
மேலும் ஜியா கூறுகையில் இந்தியாவுடன் நாங்கள் வியாபாரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அகிய அனைத்து துறையிலும் இணைந்து செயல்பட விருப்பமாக உள்ளோம் என அவர் கூறினார்.
வளரும் நாடுகள்
மேலும் உலக நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா மற்றும் சீனா முதன்மையாக உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் இணைவதன் மூலம் அசியாவின் பொருளாதாரம் உச்சத்திற்கு கொண்டு செல்லும் சக்தி இரு நாடுகள் மட்டும் தான் உள்ளது.
10 வருடங்கள்
அடுத்த 10 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் சுமார் 2 டிரில்லியன் டாலர் வரை எட்டும் எனவும் சில கணிப்புகள் வெளிவந்துள்ளது.